Monday, September 26, 2011

வாழ்ந்து கெட்டவர்களின் சரித்திரம்


சென்ற அத்தியாயத்தில் தமிழர்கள் பிழைப்புக்காக புலம் பெயர்ந்து அடிமையாக மாறிய அவலத்தைப் பார்த்தோம்.  இந்தியாவில் கல்கத்தா முதல் எல்லா மாநிலங்களில் இருந்தும் பல இடங்களுக்கு புலம் பெயர்ந்தார்கள். முக்கிய காரணம் வறுமை. ஆனாலும் முன்பின் கேள்விபட்டிராத நாடுகளுக்கு ஆட்டு மந்தைகள் போலவே அழைத்துச் செல்லப்பட்ட அத்தனை பேர்களுமே தமிழர்களாகத்தான் இருந்தார்கள்.  

இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி நம்முள் எழ வேண்டும்.  எல்லா வசதிகளும் இங்கு இருந்தது. மன்னர்கள் ஆண்ட நாடிது. கங்கை கொண்டான், கடாராம் கொண்டான் என்று இன்று வரைக்கும் பல மன்னர்களின் புகழ்பாடும் சரித்திர குறிப்புகளும் அவர்களின் பெருமையை பறைசாற்றுகின்றது. 

ஏனிந்த அவலம் உருவானது?

அபரிமிதமான மனித சக்திகளும், மற்ற நிலவள, நீர்வள ஆதாரங்களும் இருந்த போதிலும் ஏன் இந்தியாவில் குறிப்பாக தமிழர்கள் தங்களின் வாழ்க்கைகாக அடிமையாக மாறினார்கள்? 

சற்று பின்னோக்கி பார்த்து விட்டு வந்து விடலாம். 

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் என்ற வஸ்துவுக்காகவும், இன்னபிற தங்களின் சுயலாபத்துக்காவும்  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகள் எந்த அளவுக்கு கீழ்தரமாக இறங்கி, வலிமை குறைந்த நாடுகளின் மேல் தங்கள் அரசியல் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அந்தந்த நாடுகளையும், நாட்டு மக்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருப்பதையும் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுருககிறோம் என்பதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். 

இதே வேலையைத்தான் பிரிட்டன் அரசாங்கம் அப்போது இந்தியாவில் தொடங்கி வைத்தது.  

எப்படி தொடங்கினார்கள் என்பதை பார்த்து விட்டு நகரும் போது நமக்கு இந்த அடிமைகள் எப்படி உருவானார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


ஆரியர், யவனர், சகர், கூர்ஜரர், ஜாட், ஆபிரர், ஹுணர்கள், அராபியர், துருக்கியர் முதல் பின்னால் வந்த எத்தனையோ சிறு சிறு இனங்கள் கால மாற்றத்தில் இந்தியாவிற்குள் வந்தனர். ஒவ்வொருவரும் உள்ளே வந்ததும் முடிந்தவரைக்கும் தங்களது காலணியை உருவாக்கிய போதிலும் அடுத்து வந்தவர்களிடம் ஆட்சியை பறிகொடுத்து விட்டு நடையை கட்டத்தொடங்கினர்.  ஆட்சி பறிபோனதும் தங்களை ஒரு இனமாக கருதிக் கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். 

இந்தியா என்பது எப்போதும் போலவே அகண்ட தேசமாகவே இருந்தது.  உள்நாட்டுப் போர்கள் முதல் வெளிநாட்டில் இருந்து வந்து யுத்தம் தொடுக்கும் அந்நிய படையெடுப்பாளர்கள் வரைக்கும் ஒவ்வொன்றையும் சந்தித்துக் கொண்டேயிருந்தாலும் அடிப்படை கிராம அமைப்பில் எந்த மாற்றமும் நடந்து விடவில்லை.  இங்கு பசி, பட்டினி, பஞ்சம், புயல் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் பஞ்சமில்லை.  

மக்களும் பல சமயங்களில் பஞ்சை பராரி போலவே தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டு இதுவும் கடந்து போகும் என்பதாகத்தான வாழ்ந்து கொண்டிருந்தனர். இயற்கை மற்றும் செயற்கை காரணங்களினால் எத்தனை பிரச்சனைகள் இந்தியாவை தாக்கிக் கொண்டிருந்தாலும் 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் உள்கட்டமைப்பு கலாச்சாரத்தை பெரிய அளவுக்கு சிதைத்து விடவில்லை என்பதும் உண்மையே. 

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இருந்து சுற்றிக் கொண்டே கைராட்டினமும், கைத்தறியும் தொடந்து ஓடிக் கொண்டேதான் இருந்தது.  இயக்குவதற்கு தேவைப்படும் மனித சக்திகளுக்கும் பஞ்சமில்லை.

பழைய காலத்தில் ஃபினிஷியன், கிரேக்க, ரோமனிய, அரேபிய வியாபாரிகளின் மூலம் இந்தியத் துணிகளையும், மற்ற உபயோகப் பொருட்களையும் ஐரோப்பா வாங்கிக் கொண்டு விலையுயர்ந்த ரத்தினங்களையும், பல்வேறு விதமான கனிமப் பொருட்களையும் இங்கே கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.  எல்லாமே பண்டமாற்று முறையில் நடந்த கொண்டிருந்தது. 


தங்கத்தின் மீதிருக்கும் ஆசை இன்று நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே இருந்தது.  மன்னர்கள் முதல் வேத புரோகிதர்கள் வரை ஒவ்வொருவருக்கும் இருந்த இந்த ஆசைகளே பலரையும் இங்கே வரவழைத்தது. இந்தியாவிற்குள் வந்திறங்கும் ஒவ்வொரு வணிகர்களின் நோக்கமும் பண்டமாற்று முறை மூலம்  நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  

ஆனால் நம்ம பிரிட்டன் மக்கள் கெட்டிக்காரர்கள் தானே?  

வைத்தார்கள் ஒரு பெரிய ஆப்பு.  

ஒவ்வொரு இடமாக கைவைத்து கலகலக்க வைப்பதை விட மொத்தமாக ஒரே இடத்தில் கைவைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தனர்.  

அதைத்தான் செயல்படுத்தத் தொடங்கினர்.

இதைப்பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள சில ஆதார சரித்திர குறிப்புகள் இருக்கிறது. 

1853 ஜுன் மாதன் 25ல் நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது.  ஏறக்குறைய இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய்கள் கலகம் நடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலே வெளிவந்தது. கட்டுரையின் தலைப்பு " இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி " என்ற பெயரில் வெளிவந்தது.  அதில் வந்துள்ள கட்டுரை பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. 

கட்டுரையில் என்ன இருந்தது என்பதை கடைசியில் பார்க்கலாம்.  

முதலில் நமது இந்தியாவில் இருந்த சமூக அமைப்பு எப்படியிருந்தது என்பதை பார்த்து விடலாம்.

ஒரு கிராமம் என்பது பூகோள ரீதியில் நூறு ஏக்கர் முதல் ஆயிரத்திற்கும் மேற்றபட்ட ஏக்கர்களை கொண்டதாக இருந்தது.  இதில் விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் இருந்தது.  ஏறக்குறைய இது போன்ற சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டதாக ஒரு சிறுநகரம் உருவாகியிருந்தது.  ஒரு கிராமத்தின் நிர்வாக அமைப்பினை கிராம முன்சீப் கவனிக்கின்றார்.  இவரே கிராமத்தின் அத்தனை பிரச்சனைகளையும் கவனிக்கின்றார்.  மேலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் பழகி வைத்திருப்பதன் காரணமாக இவருக்கு நிர்வாகம் செய்வதில் எந்த பிரச்சனையும் உருவாவதில்லை. உடனடி தீர்வுகள் மூலம் ஒவ்வொரு கிராமத்தின் அமைதியும் நிலைநாட்டப்படுகின்றது.  

முறைப்படியான வரிவசூல் முதல் தனிப்பட்ட விரோதங்களை நீக்குவது முதல் இந்த கிராம முன்சீப் சிறப்பாகவே செயல்பட்டன்ர்.  கிராமத்தில் உள்ள கணக்குபிள்ளைகளை கர்ணம் என்று அழைக்கப்படுகின்றார். இவரே அந்த கிராமத்தில் இருக்கும் மொத்த வயல்களின் நீளம் அகலம் போன்ற கணக்கு வழக்குகளை கையாண்டு கொண்டிருப்பவர்.  இது தவிர கிராமத்திற்கென்று இருக்கும் வெட்டியான்கள் தனிப்பட்ட முறையில் உள்ளே நடக்கும் சங்கதிகளை உளவு பார்த்து கிராம முன்சீப்பிடம் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தனர்.  இது தவிர தோட்டி என்பவன் தனியாக உண்டு.  

இவன் இரண்டு கிராமங்களுக்கும் இடையே உள்ளே எல்லைகள் முதல் வயல்களுக்கு பாதுகாப்பு வரைக்கும் போன்ற மற்ற விசயங்களுக்கு ஆதாரமாக இருந்து தனது பணியை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருந்தான். 


இரண்டு கிராமங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை மற்றும் நீர் சம்மந்தமான பிரச்சனைகள் உருவானால் இவனே சாட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தான்.  ஏரிகளை, நீர்நிலைகளை காவல் காப்பதும் இவனின் பொறுப்பாகும்.  ஒவ்வொருவரின் வயல்களுக்கும் நீரை பங்கீட்டு அளிப்பது முதல் கண்மாய் பாதுகாப்பது வரைக்கும் இவனின் பொறுப்பாகும்.

பிராமணன் மொத்த கிராமத்து மக்களுக்கு பூஜை செய்பவன்.  கிராம ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு மணலில் எழுத்துக்களை எழுதி கற்றுக் கொடுப்பவர். ஊருக்குள் இருக்கும் ஜோதிடர் கிராமத்து மக்களுக்கு சகுனங்களை தெரிவிப்பவர்.  

மொத்ததில் ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு வெளியே என்ன நடக்கின்றது என்பது குறித்து கவலைப்பட்டுக் கொள்வதில்லை.  அந்நிய படையெடுப்பா, மன்னரா, குறுநில மன்னரா என்பது போன்ற தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதும் இல்லை அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை.  

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை என்பது போலவே அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்னர்.

இடையில் வரும் பஞ்சம், வறுமை, கொடிய நோய்கள் என்று ஒவ்வொன்றாக கிராமத்தை தாக்கிவிட்டு ஏராளமாக மனித உயிர்களை காவு வாங்கிய போதில் அடிப்படை கிராம மக்களின் சிந்தனைகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை.  கட்டுக்கோப்பு என்பதாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  

மேல்மட்ட அளவில் உள்ளவர்கள் அடித்துக் கொண்டு செத்தனரே தவிர அது போன்ற எந்த விசயங்கள் கிராமத்திற்குள் வருவதுமில்லை. கிராமத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கவுமில்லை. 

ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து ஒவ்வொரு பகுதியை சுற்றிப் பார்த்த போது தான் இந்த அருமை பெருமைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கினர்.  

இப்போது மேலே சொன்ன கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த முக்கிய சராம்சத்தை பார்த்துவிடலாம்.

" இந்தச் சிறய அசைவற்ற சமுதாய அமைப்பு இப்பொழுது பெரும் பகுதி அழிந்து விட்டது.  அல்லது அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு காரணம் பிரிட்டனின் வரி வசூலைக் காட்டிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களை விடவும் பிரிட்டிஷாரின் நீராவி இஞ்சினும், சுதந்திர வணிகக் கொள்கையுமேயாகும் என்று நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் கட்டுரையாக வந்தது. 

இது போன்ற ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து மக்களை ஒரே நாளில் அடிமையாக்கி விட முடியுமா?  கிராமத்து அடித்தள விசயங்களில் கைவைக்காமல் சுற்றிலும் உள்ள விசயங்களில் கவனம் செலுத்தினர். மெதுமெதுவாக இந்த சமூக அமைப்பை குளறுபடியாக்கி தெளிந்த குளத்தை சேறாக மாற்றத் தொடங்கினர்.

20 comments:

Unknown said...

இன்றைய ஞாயிறு பதிவிற்கு காத்திருந்தேன்.தெளிந்த சமூக குளத்தை சேறாக்கிய வித்தையை,கதையை அறிய ஆவல்.தொடருங்கள்.தொட்ர்கிறோம்.

Anonymous said...

நிறைய தெரியாத விஷயங்கள்...தொடருங்கள்...தொட்ர்கிறோம்...

Anonymous said...

இதுபோன்ற பதிவுகள் எழுதுபவர்கள் மிகவும் குறைவு... அதுவும் எவ்வித ஆதாயமுமில்லாமல்..

உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Unknown said...

மாப்ள பல விஷயங்களை புரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியாய் இருக்கிறது....தொடருங்கள் தொடர்கிறேன் நன்றி!

Thomas Ruban said...

அருமையான தொடர் பதிவு, தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள உங்கள் பதிவுகள் உதவியாய் இருக்கிறது நன்றி சார்.

தெளிந்த சமூக குளத்தை சேறாக்கிய வித்தையதான் இன்றைய அரசியல்வியாதிகளும் தொடர்ந்து செய்து கொன்று வருகிறார்கள்.

'பரிவை' சே.குமார் said...

விரிவாக எழுதுகிறீர்கள்.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பகிர்வு.

Unknown said...

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/2012.html http://www.hiddenhistoryhumanity.com/

regards
vinoth

Unknown said...

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/06/blog-post_07.html

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்கள் உழைப்பு அபாரம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வினோத்

படித்தேன். கார்த்திக் நான் பிறந்த பகுதியைச் சேர்ந்தவர்தான். கிடைத்த வாய்ப்பில் சுருக்கமாக முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்கின்றார்.

ஷீ நிசி

ரா செழியன் ஞாயிறு அன்று நான் சரியாக வெளியிடுகின்றேன் என்பதை புரிந்து கொண்டு காத்திருந்து வந்து படிப்பது தான் கிடைத்த அங்கீகாரம் அல்லது ஆச்சரியம். நன்றி செழியன்.

ம.தி.சுதா said...

/////ஆரியர், யவனர், சகர், கூர்ஜரர், ஜாட், ஆபிரர், ஹுணர்கள், அராபியர், துருக்கியர் முதல் பின்னால் வந்த எத்தனையோ சிறு சிறு இனங்கள் கால மாற்றத்தில் இந்தியாவிற்குள் வந்தனர். ////

மிகவும் ஆழமான பதிவு..

தமிழனின் பரம்பல் அவனது புகழை உலகறிய வைத்தாலும் அவனால் ஒரு நிலைப்பாடான தரைத் தோற்ற அமைப்பை கையப்படுத்த முடியாமல் போனது என்றும் தீராத வலியல்லவா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

aotspr said...

மிகவும் நல்ல பதிவு....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

வெற்றிவேல் said...

அருமையான படிப்பு

nerkuppai thumbi said...

பல நூற்றாண்டுகளில் திகழ்ந்தவற்றை -- மெதுவான, தொடர்ந்த மாற்றங்களுடன் -- தொகுத்து சொல்வது எளிதல்ல. தொடருங்கள்.
தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி பல செய்திகளை சங்க நூல்களும், அதற்குப் பின் வந்த நூல்களும் சொல்கின்றன; ஆனால் அவற்றில் எந்த காலத்தை அவைகள் குறிக்கின்றன என்று குறிப்புகள் சரியாக இல்லை எனத் தோன்றுகிறது. (அவ்வை ஒருத்தியா, அல்லது அதே பெயரில் பலர் இருந்தனரா, ஒருவரே என்றால் எந்த நூற்றாண்டு என்ற வினாக்கள் சில) ..
பதிவில் வரும் முன்சீப்பு, கர்ணம் என்பவை ஷேர்ஷா காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தன (கி பி 1620 சமீபம்) என்று படித்து இருக்கிறோம். அதற்கு முன், தமிழ் நாட்டில் எந்த முறை பழக்கத்தில் இருந்தது என்பதற்கு சரியான விடை கிடைக்கவில்லை.

ஜோதிஜி said...

நெற்குப்பை தம்பி

உங்கள் அக்கறை ஆழ்ந்த புரிந்துணர்வு தேடுதல் போன்றவைக்கு முடிந்த வரைக்கும் உழைத்து தொடருகின்றேன்.

Rathnavel Natarajan said...

அருமையான விபரங்கள்.
நன்றி.

Vetirmagal said...

எத்தனையா புத்தகங்கள் படித்தாகி விட்டது, ஆனால் இந்த வரலாறுகளை ஏன் இது வரை என்னால் படிக்க முடியவில்லை, என்ற கேள்வி தான் என் முன்னே எழுகிறது!

உங்கள் ஆர்வமும் , கோர்வையாகவும், சுவாரசியமாகவும் உள்ள எழுத்து நடையும் , படிக்க தூண்டுகிறது.

வணக்கமும், நன்றியும்.

ஜோதிஜி said...

நன்றி ராஜ்

மாறன் said...

19 ம் நுற்றாண்டில் ஏது இந்தியா.?

ஜோதிஜி said...

பாரதம் இந்தியா எப்படி அழைக்கலாம்?