Thursday, December 31, 2009

பிரபாகரன் இறுதி மொழி

பிரபாகரன் தொடங்கிய ஆயுதப் போராட்டத்தை தாண்டி, பதுங்கு தாக்கு என்ற கொரில்லா முறையில் இருந்து மாறி, இராணுவ தாக்குதல்கள் என்ற முறைப்படியான போராட்டம் தொடங்கும் இந்த காலகட்டத்தில் அவருடைய புரிதல்களையும், உண்டான நிகழ்வுகளில் இருந்து அவருக்கு உருவான தாக்கத்தையும் அவருடைய பிரபாகரன் "மொழியை கண்டுணர்ந்து" ஈழ முதலாம் யுத்தத்தில் நுழைவோம்.

" தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான் எமது இயக்கத்திற்கு விடுதலைப்புலிகள் என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கொரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது"

"இந்த போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தி இருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன. இந்த நீண்ட போராட்டத்தின் பின் இந்த கருப்பு "ஜுலைக்குப் பிறகு தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஆட்சியாளர்கள் இணைத்து உள்ளனர்"

" என்னுடைய கொரில்லா போராளியின் வாழ்க்கை துயரமும், விரக்தியும் கலந்தது. நாங்கள் தேர்ந்தெடுத்த ஆயுத பாதை என்பது மிகச் சரியானது என்பதை கடந்த 12 ஆண்டுகளில் உணர்ந்துள்ளோம். மக்களும் இப்போது அதை உணரத் தொடங்கியுள்ளனர்."

" உமா மகேஸ்வரனுக்கும் எனக்கும் உண்டான பிரிதல் என்பது தனிப்பட்ட விரோதம் அல்ல. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் மொத்தமாக ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்கம் குறைந்து, குழப்பம் மலிந்து மொத்தமும் கொள்கைகள் அத்தனையும் சிதைந்து போய்விடும். உமா மகேஸ்வரனை இயக்கத்தின் தலைவராக நியமித்தவன் என்ற முறையிலும், மத்திய குழுவின் தீர்மானத்தின்படியும் வெளியேற்ற வேண்டிய கட்டாயம்"

" 2,9,1982 நான் எழுதிய கடிதத்தின்படி மொத்த மற்ற இயக்கங்களுடன் சேர்ந்து செயல்பட தயாராய் இருப்பதையும், ஆனால் நீண்ட கால செயல் அடிப்படையில் இருக்க வேண்டிய அவஸ்யத்தையும் தெரிவித்த போதிலும், அவர்கள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுவதை விட சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை விலக்கி செயல்பட்டுருந்தால் மகிழ்ச்சி"

" சாதாரண இயல்பான வாழ்க்கை வாழ ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். நான் அந்த வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மேலும் மற்ற இயக்கங்களுடன் என்னுடைய மேலாதிக்கம் இணைந்து செயல்பட முடியாமை இருப்பதாகக் கூறுவது எல்லாம் திட்டமிட்டு சொல்லக்கூடிய குற்றச்சாட்டு. நாங்கள் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்பவர்கள் அனைவரும் பகிர்ந்து அளிக்கக்கூடிய ஒரு சமாதான உடன்படிக்கை தொடக்கம் முதலே ஏற்படுத்திக்கொடுத்து இருந்தால் நாங்கள் ஏன் ஆயுதம் தூக்கப் போகிறோம்?"

" கருப்பு ஜுலை என்பது ஏற்கனவே திருகோணமலையில் நடந்து கொண்டுருந்த கலவரத்தின் திட்டமிடப்பட்ட தொடர்ச்சி. நாங்கள் காரணமல்ல. கவனித்தவர்களுக்குப் புரியும். வட்ட மேஜை மாநாடும், சமாதான ஒப்பந்தங்களும் என்னைப் பொறுத்தவரையிலும் காலவிரயம். கடந்த பாடங்கள் இதைத்தான் உணர்த்துகிறது."

" தமிழர் விடுதலைக்கூட்டணி (அமிர்தலிங்கம்)யின் சந்தர்ப்பவாத அரசியலானது எங்களது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாக பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. திட்டவட்டமான கொள்கைகள் ஏதும் இல்லை. பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை அடிமையாகவே வைக்க முயற்சிக்கின்றார்கள். மேலும் எங்களை முடக்குவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த கறுப்பு ஜுலை என்பது தமிழீழம் முழுக்க பரவிக்கொண்டுருக்கிறது. இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்வோம் என்று தடுப்பதில் முனைப்பாக செயல்படுகிறார்கள்"
" இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் போதுமானது. எங்களது விடுதலையை நாங்களே வென்று எடுத்துக்கொள்ள மனத்துணிவு இருக்கிறது. தங்களுடைய உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த நாங்கள் தீர்மானிக்கும் தேசிய இராணுவத்தின் உதவியோடு எந்நாளும் சுதந்திரமாய் வாழும் தமிழீழ நாடு வாழப்பட்டால் ஒழிய ஒருபோதும் தமிழர்கள் வாழப்போவதில்லை. மறுப்பவர்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்காதவர்கள்"

" திருகோணமலை படைதளத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இன்று வந்து ஆயுத தளவாடங்களை இறக்கிக்கொண்டுருக்கும் அமெரிக்கா நாளைய இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை"

" நாங்கள் கனவு காணும் தமிழீழம் ஒரு சோசிலிச அரசாக அமையும். தனிநபர் சுதந்திரமும், சமத்துவமான சமூக அமைப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயக நாடாக மலரும். தங்கள் பொருளாதரத்தையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் பேணி காப்பதில் அக்கறை கொண்டு விளங்கும். தமிழீழம் என்பது அணிசேரா கொள்கை நாடாக, குறிப்பாக இந்தியாவோடு நேச உறவோடு விளங்கும். இந்து மகா சமுத்திரத்தை அமைதி பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையை கொண்டு விளங்கும். இதை அடைய கால வரையறை இருக்க முடியாது. உலக அரங்கில் உருவாகும் மாற்றத்தைப் பொறுத்து இது அமையும்"

(இத்துடன் ஐந்தாம் பாகம் முடிவடைந்தது)


2009 ஆம் ஆண்டு புடம் போட்டு புதிய பாதையை காட்டிய ஆண்டு.

இலங்கை தமிழர்களின் வரலாற்றில் இனி வரும் ஆண்டுகளில் என்றுமே மறக்க மறக்க முடியாத ஆண்டு.

உலகத்தில் வாழும் அறிவுஜீவிகள் பேசும் பிரபாகரன் ஆளுமை செலுத்திய சர்வாதிகாரம் சரியா என்பதையும், பிரபாகரன் தவிர்த்து மற்ற ஜனநாயக தலைவர்கள், தமிழர்களின் "ஒற்றுமையை" ஜனநாயகத்தை போற்றுகிறோம்", "வளர்க்க விரும்புகிறோம்" என்பவர்களின் அத்தனை "நல்ல விசயங்களையும்" நாம் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு பல பாடங்களையும் உருவாக்கிய உருவாக்கிக்கொண்டுருக்கும் ஆண்டு?

மொத்தமான கொடூரங்கள் கண்முன்னே நடந்தபோதிலும் உலகம் முழுக்க வளர்ந்த நாகரிக மனிதர்களும், தலைவர்களும்,நாடுகளும் எந்த அளவிற்கு தங்களுடைய தனிப்பிட்ட அபிலாஷைசைகளை நிறைவேற்றிக்கொள்ள தயாராய் இருப்பார்கள்? என்பதையும் நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்திய ஆண்டு?

2009 எத்தனை அதிர்ஷ்டம் இல்லாத நிகழ்வுகளை தனிமனிதன் வாழ்விலும், வாழ்வுரிமை போராட்டங்களிலும் ஆளுமை செலுத்தியதைப் போல வரும் 2010 அதி முக்கியமான ஆண்டு.

முதல் தொடக்கப் பதிவில் குறிப்பிட்டது போல நிறைய "செய்திகளையும்", "தண்டனைகளையும்" தரப்போகும் ஆண்டு.

"மாற்றங்கள் என்பது மாறாதது".

இனிய ஆங்கில (2010) வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்வோம்.


Monday, December 28, 2009

பிரபாகரன் முன் (3)

" சிங்கள மன்னன் விஜயன் வங்காளத்தில் இருந்து வந்த வழித்தோன்றலில் மூலமாக வந்தவர்கள் தான் நாங்கள்.  நாங்களும் ஆரியர் தான்"  பின்னால் ஆட்சிக்கு வரப்போகும் பிரேமதாசா சார்க் மாநாட்டில் கூறியது.  யஸ்வின் குணரத்னே என்பவர் பண்டாரா நாயகா பண்டாரம் என்ற தமிழர் இனத்தில் இருந்து வந்தவர் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயவர்த்னே 300 ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தில் இருந்து வந்த செட்டியார் என்ற இனத்தில் இருந்து வந்தவர் என்று ஹிந்த என். ராம் (1989) மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுவே ஓர் அளவிற்கு எல்லை மீறி ஜெயவர்த்னே மூக்கை இந்திரா காந்தி மூக்கோடு ஒப்பிட்டு பேசும் அளவிற்கு வந்தது. அதையும் தாண்டி அமிர்தலிங்கம் மூக்கோடு ஒப்பிட்டு நீ தமிழனே இல்லை? என்கிற அளவிற்கு போய் முடிந்தது.

சிங்களர்களின் பெரும்பான்மையினர் தென்னிந்தியர்கள் தான்.  இவர்கள் சிங்களப் பெருமையை மீட்டெடுப்பது என்பது சுத்த சாணித்தனம் (Bull Shit) என்று கிண்டல் செய்தவர் 1954/55ல்  இலங்கைப் பிரதமாக இருந்த சர்.ஜான் கொதலவால என்பவர்.  ஆனால் ஒவ்வொரு சிங்கள தலைவர்களும், புத்த குருமார்களும் தங்களுடைய இனத்தூய்மை திரிபுடன் படைக்கப்பட்ட "மகாவம்சம்" மூலமாக தங்களை நிலைநாட்டிக் கொள்வதில் மிகக் கவனமாக இருந்ததுள்ளனர்.

இது ஒரு புறம் என்றால் தமிழ்த்தலைவர்கள் தொடக்க கால வரலாற்றைப் பார்த்தாலும் சரி , இலங்கை என்பது இரண்டு மக்களும் ஒன்றாக அமைதியுடன் வாழவேண்டிய பூமி என்று "தரிசன" பார்வை மூலம் பார்த்த தொடக்க கால இனவாதி தலைவர்களும் அப்போதைய ஐரோப்பிய பெண்மணிகளை திருமணம் செய்து (ஆங்கிலேயர்கள் உருவாக்கி வைத்திருந்த சிறப்பு சலுகை) அவர்களின் வழித்தோன்றலாக வந்து, மேல்நாட்டு கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கங்கள் என்று மேல்தட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  அதுவே கடைசியாக அஹிம்சை வழியில் போராடிய தந்தை செல்வா வரைக்கும்.  தந்தை செல்வா மலேசியாவில் ஈப்போவில் பிறந்தவர்.  கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர். மிகப்பெரிய கல்வியாளர்.  வாதப்புலி. செல்வக்குடிமகன்.  காந்திக்கு இணையாக இன்று வரைக்கும் இலங்கை மக்களால் பார்க்கப்படுபவர்.

ஆனால் தந்தை செல்வா கூறிய "தனி நாடு தான் இனி தமிழர்களுக்கு" என்று கூறியதற்கு முன்பே இந்த தமிழீழத்தை குரல் எழுப்பியவர் அப்போது தந்தை செல்வாவில் தமிழரசு கட்சியில் இருந்த  நவரத்னம் என்பவர்.

" இப்போதாவது நாம் விழித்துக்கொள்வோம்.  டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா,  இப்போது சீறீமாவோ பண்டாரா நாயகா என்று வந்தவர்கள் அத்தனை பேரும் நம்மை ஏமாற்றி விட்டனர்"  என்று தொடக்கத்திலேயே குரல் எழுப்பியவர்.  ஆனால் தந்தை செல்வாவின் செல்வாக்கு அவரின் குரலை அமுக்கிவிட்டது.  பின்னாளில் இதே இந்த தந்தை செல்வா வருந்தி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.  அப்போதைய தலைவர்கள் சுந்தரலிங்கமும், நவரத்னமும் தெளித்த விதைகள் தான் பின்னாளில் உருவான சிவகுமரன் முதல் தொடங்கி கட்சியில் இருந்து விலகிய தங்கத்துரை, குட்டிமணி உருவாக்கிய TELO முதல் பின்னாளில் தனியாக ஆளுமை செலுத்தும் அளவிற்கு வளர்ந்த (LTTE) பிரபாகரன் வரைக்கும்.  இவர்கள் உருவாக்கிய பாதையில் வந்து சேர்ந்த மொத்த இளைஞர்களும் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கல்வி "தரப்படுத்துதல்" மூலமாக பாதிக்கப்பட்டு பாதியில் படிப்பை விட்டவர்களும், வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும்.  ஆயுதப் பாதையை மறைமுகமாக வளர்த்தவர்களும் சிங்கள ஆட்சியாளர்களே.

தமிழ்நாட்டைப் போலவே இலங்கை தமிழர்களிடத்திலும் சாதீய ஈடுபாடும், தாழ்த்தப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மொத்தமும் அடக்கி ஆண்ட விதமும் இங்கே குறிப்பிடவேண்டும்.  காரணம் தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சுத்த தமிழன் தான்.  எந்த சந்தேகமும் இல்லை.

1984 வரைக்கும் இந்த இலங்கைப் பிரச்சனையில் மக்களுடன் போய் பேசி, அவர்களுடைய அடித்தட்டு மக்கள் வரைக்கும் பழகி கேட்டு உண்மையான தீர்வுக்கு பாடுபட்டவர் என்கிற வகையில் இந்திரா காந்தி காலத்தில் தூதராக செயல்பட்ட ஜி.பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.  மொத்த மலையக தமிழர்கள் என்று தொடங்கி அத்தனை தமிழர்களிடமும் தமிழில் பேசி இறுதியாக இணைப்பு சி என்ற வழிமுறையை உருவாக்கியவர்.  அவருடைய பங்களிப்பு எந்த அளவிற்கு இருந்தது என்றால், " இனி இவர் இலங்கைக்கு வந்தால் நாங்கள் பேசத் தயாராக இல்லை"  என்று ஜெயவர்த்னே கூறும் அளவிற்கு?

இதே போல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஜெயவர்த்னே கூறியதும் குறிப்பிடத்தக்கது.

" இலங்கையுடன் இந்தியா தெளிவான புரிந்துணர்வுடன் இருந்தாலும் தென்னிந்தியாவில் தீவிரவாத ஆதரிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல"  என்று எள்ளும் கொள்ளுமாக வெடித்து சீறீனார்.

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது பிரதமர் நேரு " இது என்ன சுத்த நான்சென்ஸ்"  என்று பொறுப்பை தட்டிக்கழித்ததும், அப்போது இருந்த தமிழக பக்தவச்சலம் " எத்தனை பேர்களை இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று எண்ணிக்கை ரீதியாகவே இந்த இலங்கைப் பிரச்சனையை பார்த்ததும் அன்று முதல் இன்று வரையிலும் இந்திய தமிழ்நாட்டு ஒத்துழைப்பு இந்த அளவில் தான் இருக்கிறது.

சாஸ்திரி ஒப்பந்தம் முதல் ராஜபக்ஷே ஒப்பந்தங்கள் வரைக்கும் இந்த தமிழர்களின் பிரச்சனைகள் மொத்தமும் தமிழ் மொழி, தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி, இலங்கையின் உண்மையான பிரச்சனையை புரிந்து கொள்ள என்று சம்மந்தப்பட்டவர்கள் என்று பார்த்தால் ப.சிதம்பரம், பின்னால் ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வுக்குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்த டி.ஆர். கார்த்திகேயன்.

ராஜிவ் காந்தி இலங்கை பிரச்சனையில் நுழைந்த போது பணியை ஒப்படைத்தது ப. சிதம்பரத்திடம்.  ஆனால் ப. சிதம்பரத்திடம் பிரபாகரனை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தவர் புலவர் புலமைபித்தன். இது போக டி.என்.சேஷன் மூலமாக " நீங்கள் இலங்கை சென்று அமைதிப்படை ஏன் அடிவாங்குகிறது? என்ன தான் அங்கு நடக்கிறது?  உண்மை நிலவரத்தைத் தாருங்கள்"  என்று டி.ஆர். கார்த்திகேயனிடம் பணி ஒப்படைக்கப்பட்ட போது அவர் கொடுத்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

1. விடுதலைப்புலிகளை சேர்க்காமல், கலந்து ஆலோசிக்காமல் இலங்கைப் பிரச்சனையில் தீர்வு கண்டு விட முடியாது.

2.  பேசியபடி உண்மையான அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என்பதைவிட கொடுக்கும் எண்ணத்திற்குக்கூட ஆட்சியாளர்கள் தயராக இல்லை. அமைதிப்படையை வாபஸ் வாங்கிக்கொள்வதே சிறந்தது என்கின்ற அளவிற்கு தீர்க்கதரிசனமாய் செயல்பட்டார்.

இலங்கையில் இந்தியா சார்பாக தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டுருந்த வடக்கத்தியர்க்கு மொத்தமாக உள்ளே நடக்கும் பிரச்சனைகள் முழுவதும் அப்போது தான் புரிந்த கொடுமையும் நடந்தது.  தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ப. சிதம்பரத்தின் கருத்து இதே போல் இருந்தது.  ஆனால் இவர்களைத் தாண்டி மிகப்பெரிய லாபி டெல்லியில் அன்றும் இன்றும் என்றும் இருந்து கொண்டே இருப்பதால் எந்த தமிழனும் தலையிட்டாலும் இறுதியில் தலைவலி திருகுவலியாகத் தான் முடியும் துர்பாக்ய நிலைமை.  அதனால் இன்றுவரையிலும் தேர்தல் சமயத்தில் மட்டும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல வாய்ச்சவடாலில் கழிந்து விடுகின்றது.

வட கிழக்கு மகாணங்களில் வாழும் மொத்த தமிழ்மக்களும் காலை எழுந்து இரவு வரைக்கும் ராணுவ வீரனை, அவர்களின் துப்பாக்கியயை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை கடத்துவது அன்றாட நிகழ்வாக விட்டது.  காரணம் சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கிய 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் 9 பேருக்கு ஒரு ராணுவ வீரன் என்கிற ரீதியில்.  அந்த அளவிற்கு அச்சமும், அயர்ச்சியும் நிறைந்த தமிழர்களின் வாழ்க்கை. இந்த நிலைமை 1983ல் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1700 கோடி என்பதில் இருந்து 2006ல்  6950 கோடி வரைக்கும் உயர்ந்து நாலில் ஒரு பங்கை இராணுவத்திற்கு கொண்டு போய் கொட்டும் அளவிற்கு இந்த இன அழிப்பு வெகு ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது.

உள்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இத்தனை பிரச்சனைகள் என்றால் தமிழக மீனவர்களுக்கு இன்று வரையிலும் சொல்லி மாளாத துன்பங்கள்.  வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை முதல் தனுஷ்கோடி வரைக்கும் அமைந்த கடல்பகுதிக்கு பாக் நீரிணை என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு இந்தப்பெயர் வந்தது மற்றொரு சுவையான சம்பவம்.  அப்போது ஆண்டு கொண்டுருந்த (1975 முதல் 1763 வரை) ஆங்கிலேய கவர்னர் ராபர்ட் பாக் என்பவர் அதிரடியாக தன்னுடைய பெயரை சூட்டியதும் அதுவே இன்று வரை நிலைத்து இருப்பதும் நாம் அவருக்கு செலுத்தும் விசுவாசம் தானே?

மொத்த 175 கடற்கரை கிராமங்களும் ஏறக்குறைய நான்கு லட்சம் மீனவர்களுக்கும் கச்சத்தீவு ஒப்பந்தப்படி அந்தோணியார் கோவிலில் வழிபடலாம், மீன்வலைகளை உலர்த்திக்கொள்ளலாம் என்று ஆயிரெத்ட்டு லாம் என்றாலும் அன்றாடம் பார்த்துக்கொண்டுருக்கும் கோர காட்சிகளும் வாய் மௌனியாக இருக்கும் வல்லரசும், வால்பிடிப்பவர்களுக்கும் இந்த தமிழ்நாட்டு மீனவர்களும் பிரபாகரன் போல தீவிரவாதியாகத் தான் தெரிகிறார்கள் போல?

மும்மை தீவிரவாதி கசாப் கூட நான் மும்பைக்கு வந்தது திரைப்பட வாய்ப்பு கேட்டு என்பதாக தெளிவாக பேசும் போது இந்தியா என்ற நாடு வல்லரசா இல்லை எப்போதுமே வாய் மூடிய அரசா? என்று சராசரி இந்தியனின் மனசில் ஒலித்துக்கொண்டுருக்கும் கேள்விகள் எங்கே கொண்டு போய்விடுமோ?

Sunday, December 27, 2009

பிரபாகரனுக்கு முன் (2)

" அமைதிக்கான கதவு திறந்து இருந்தது.  ஆனால் ஆயுதப் பாதை என்பது மொத்தத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது"   என்ற மொத்தமான குற்றச்சாட்டை இதில் கோர்த்துப் பார்க்கலாம்.

1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட வன்முறை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு காரணங்கள் கொண்டு மாற்றம் பெற்றதாக வந்து உள்ளதே தவிர ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் உள்ள "தமிழர் அழிப்பு" என்ற நோக்கம் மிகத் தெளிவாக இருந்து இருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு 1915 என்று தொடங்கி அதுவே சுதந்திரம் பெற்ற பிறகு 1956, 1958,1961, 1974, 1979, 1981 என்று ஒவ்வொன்றும் மொத்த தமிழனத்தையும் நிர்மூலமாக்கி விட்டது.  எந்த அளவிற்கு?

தொடக்கத்தில் பூர்வகுடி தமிழர்கள், முஸ்லிம் மக்கள் என்று சேர்ந்து இருந்த தமிழன மக்கள் தொகையும்  தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர்கள். இந்திய அன்று இருந்த மொத்த சிங்களர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் சற்று அதிகமானது தான்.

ஆனால் ஒவ்வொரு கலவரத்தின் போது அழிக்கப்பட்ட தமிழர்களும், சூறையாடப்பட்ட சொத்துக்களும், வலுக்கட்டாயமாக சிங்கள குடியேற்றமும் என்று தொடர்ந்து தொடங்கி இன்று மொத்தமாக தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் மொத்த கலவரங்களிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது 15 முதல் 40 வயதுக்கும் இடையே உள்ள மக்கள் தான் அதிகம்.  தொடர வேண்டிய தலைமுறையே அழிந்து வழியில்லாமல் போய்விட்டது.

2005 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து வெளியிடப்பட்ட (தமிழர் மனித உரிமைகள் மையம்) அறிக்கையை சற்று பார்த்தால் இதன் மொத்த கோரமும் புரியும்.

கைது சித்ரவதை சம்பவங்கள் 1,12,246 பேர்கள்

கொலைச் சம்பவங்கள் 54,053 பேர்கள்

காணாமல் போனவர்கள் 25,266 பேர்கள்

பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 12,437 பேர்கள்

இடப் பெயர்வு 23,90,809 பேர்கள்

காயம் பட்டோர் 61,132 பேர்கள் ( ஆதாரம் எரிமலை மே 2005)

தொடக்ககால அமெரிக்கா, ஆஸ்திரேலியா போலவே பூர்வகுடிகளை அழித்து தங்களை நிலைநாட்டிக் கொண்டதைப் போல ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் தங்களுக்குள் ஆட்சி அதிகாரத்திற்கு அடித்துக்கொண்டார்களே தவிர "தமிழர் ஒழிப்பு" என்று இந்த ஒரு விசயத்தில் மொத்தத்திலும் ஒற்றுமையாக இருந்து தீர்க்கதரிசனமாய் செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தெரிந்தே செய்த தவறு, ஒழிப்புக்காக மொத்த அரசாங்க பணத்தையும் கொண்டு போய் கொட்டி வளராத இலங்கையாக இன்று வரையிலும் மாற்றம் பெற வைத்தமையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

"சிங்களர்கள் மட்டும் வாழ வேண்டியவர்கள்.  இது சிங்கள நாடு.  இங்கு பௌத்தமே சமயம்.  சிங்களமே மொழி"  என்று கருத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் கடைசியில் இறக்குமதியாகும் ஆயுதங்கள் அனைத்தும் இன்றைய ராஜபக்ஷே தன்னுடைய சொந்த நிறுவனமாக லங்கா லாஜிஸ்டிக்ஸ் மூலமாகவே இறக்குமதி செய்யும் சூறையாடலும் நடந்து கொண்டு, தங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு தான் விரும்பிய சிங்கள இனத்தையும் இவர்கள் வாழ வைக்கவும் முடியவில்லை.

ஜெயவர்த்னே காலத்தில் இருந்த அமைச்சர் லலித் அதுலத் முதலி தொடக்கத்தில் கப்பல், போக்குவரத்துறையில் தான் இருந்தார்.  அவரை என்று பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக ஜெயவர்த்னே(1984) கொண்டு வந்தாரோ அன்று முதல் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் போல ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்.

இவருடைய காலத்தில் இங்கிலாந்தில் இருந்து (Keny Meeny Service) என்ற தனியார் பாதுகாப்பு நிறுவன மக்கள் வரவழைக்கப்பட்டு இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டு புதிய பாதையை உருவாக்கினார்.  இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் உதவி என்பது தனியான பாதையில் பயணித்துக்கொண்டு இருந்த இராணுவத்திற்கு அதிக போஷாக்கு போல இருந்து கொலை வெறி தாண்டவங்கள் நடத்தினார்கள்.  அப்போது ஜெயவர்த்னே கொடுத்த பேட்டி (லண்டன் ரைம்ஸ்) இங்கு குறிப்பிடத்தக்கது.

"தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தைத் தவிர மற்ற எதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லா நிலையில், இராணுவத் தீர்வொன்றை நோக்கியே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி செயல்பட்டு வருகிறார்"

இந்திரா காந்தி (1983) இந்தியாவின் ஆளுமைக்குள் இலங்கை இருக்க வேண்டிய அவஸ்ய அவசர காரணங்களை முன்னிட்டு இந்த பிரச்சனைகளை தலையிட்டு பிவி நரசிம்மராவ், ரொமேஷ் பண்டாரி, பார்த்தசாரதி, ப,சிதம்பரம் வரைக்கும் போராடிப் பார்த்த போது கூட அது இறுதியில் தோல்வியில் தான் முடிந்தது.  காரணம் ஏற்கனவே டட்லி (1965) செல்வா ஒப்பந்தம், பண்டார நாயகா செல்வா ஒப்பந்தம் போல், வெறும் காகித தீப்பந்தமானது.

பிரபாகரன் தன்னுடைய இராணுவ போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் (1984) இந்த காலகட்டத்தில் அது வரையிலும் இலங்கையில் சுதந்திரம் பெற்று  35 வருடங்களில் பாடுபட்ட அத்தனை தலைவர்களும் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு போராடியவர்கள்.  முடிந்த வரைக்கும் முட்டிப் பார்த்தவர்கள்.  ஆனால் இறுதியில் சிங்கள தந்திரத்தில் முட்டி பெயர்ந்து ஒதுங்கியவர்கள்.  ஓலமாய் மாற்றம் பெற்றுக் கொண்டு வந்த மொத்த தமிழர்களின் சராசரி வாழ்க்கையை அவர்களால் ஒரு அளவிற்கு மேல் காப்பாற்ற முடியவில்லை.  இதுவே தந்தை செல்வா " தனிநாடு என்று கேட்காமல் பெரிய தவறு செய்து விட்டேன்" என்று புலம்பும் அளவிற்கு.
இந்தியாவில் "காந்திய போராட்டம்" என்பது ஆங்கிலேயர்களை ஆச்சரியப்படுத்திய வழிமுறைகள்.  மொத்தமாக இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டுருந்தார்களே தவிர ஆங்கிலேயர்களின் கடவுள் என்று மதிக்கப்படும் மன்னர் கூட காந்தியை வரவழைத்து மரியாதை செய்த பழக்கம் உள்ள பண்பாடு நிறைந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

துவேச மனப்பான்மையை தங்களுடைய வியாபரத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, நீண்ட கால கொள்கைகளுக்கு புதைபொருளாக, மறைபொருளாக வைத்து செயல்பட்டார்களே தவிர சிங்களர்கள் போல் அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.  இந்த ஒரே காரணமும் மொத்த மக்களுக்கும் காந்தியின் மேல் நம்பிக்கை வைத்தது.  இதற்கு மாற்றுப்பாதையான நேதாஜி வழிமுறைகளும் ஒரு நெருக்கடியை கொடுத்துக்கொண்டே இருந்தது.

ஆனால் சிங்களர்களை வெறியேற்றுவதும், வெட்டித்தனமான வழியில் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கிக் கொடுப்பதும் என்று தொடங்கி அவர்களின் அறிவையும் வளர்க்க எவரும் துணியவில்லை.  துணிந்த JVP  போன்ற இயக்கங்களையும் சிங்கள ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவும் இல்லை.

வெறியை மட்டும் மூலதனமாக வைத்து மேலே வந்தவர்கள் ஒரு அளவிற்கு மேல் அதற்கு அடிமையாக போய்விட மிச்சமுள்ள பார்த்துக்கொண்டுருந்த தமிழ் இளையர் கூட்டம் "ஆயுதம் தான் இனி தீர்வு" என்ற எண்ணம் வந்ததில் ஆச்சரியம் இல்லை.

காரணம் அன்று அஹிம்சையில் வழியில் வந்தவர்கள் ஏறக்குறைய முட்டுச்சந்தின் இறுதியில் வந்து நின்று கொண்டுருந்ததும், வழி தேடிக்கொண்டுருந்தவர்களும், வலியுடன் வாழ்ந்து கொண்டுருந்தவர்களும், இந்த ஆயுதப்பாதையாவது வழி காட்டுமா? என்று ஏங்கிக்கொண்டு மொத்த தமிழ் மக்களும் குழம்பிப்போயிருந்த காலம் அது.

Thursday, December 24, 2009

பிரபாகரனுக்கு முன் (1)

இதுவரை நடந்த நிகழ்வுகளை கோர்த்து பார்க்கலாம்.  மாலையா இல்லை மண்டை ஓடா என்பது புரியும்?

தமிழர்களுக்கு இனி உரிமை என்பது சிங்கள ஆட்சியில் கிடைக்காது.  "தனி நாடு தான் இனி தீர்வு" என்று தொடக்கப்புள்ளியை உருவாக்கியவர் பிரபாகரன் அல்ல.  அஹிம்சை வழியில் போராடிக்கொண்டுருந்த தந்தை செல்வா புகழ்பெற்ற " வட்டுக்கோட்டை தீர்மானம்" மூலம் முன்மொழிந்தார்.

இதற்காக, தான் கூட்டணி மூலம் பெற்ற பாராளுமன்ற பதவியை உதறித் தள்ளி தமிழர்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெற்ற போது அவரே இதை முழுமையாக உணர்ந்து வெளியே சொன்ன உன்னதமான லட்சியம் அது.

இவரை பின்பற்றி வந்த அமிர்தலிங்கம் தந்தை செல்வா அளவிற்கு முழுமையான அர்பணிப்பு உணர்வோடு இல்லாவிட்டாலும் கூட தன்னால் ஆன, தனக்கும் சாதகமான வழிமுறைகளோடு முடிந்தவரைக்கும் ஆட்சியாளர்களோடு போரிட்டுக்கொண்டுருந்தார்.

வாதம், பிரதிவாதம் நீண்டு கொண்டுருந்ததே தவிர அரக்க சிந்தனையாளர்களை அமைதி வழிப் போராட்டம் தீர்வுக்குண்டான பாதையை நோக்கி நகர்த்துவதாக தெரியவில்லை.

அமைதி வழியில் போராடிக்கொண்டுருந்தவர்களை எந்த அளவிற்கு சிங்கள ஆட்சியாளர்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதையெல்லாம் ஊன்றி கவனித்துப் பார்த்தால் எவருமே பிரபாகரனின் பாதை தவறு என்று எவரும் சொல்ல மனம் துணியாது.

மாவட்ட அபிவிருத்தி (1981) தேர்தலும், ஜெயவர்த்னே திட்டமிட்டு உருவாக்கிய கலவரங்களும் என கொளுந்து விட்டு எறிந்து கொண்டுருந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பதவியை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் கொண்டு வந்து அவமானப்படுத்திய போதும் கூட அமிர்தலிங்கம் அமைதியைத் தான் விரும்பினார்.

தேர்தல் என்பது ஒரு வகையில் ஜெயவர்த்னேவுக்கு கண்துடைப்பு.  வேலை தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய படைபட்டாளங்களை கொண்டு போய் இறக்கி இருந்தார்.  கண் அசைவு கிடைத்ததும் காரியங்களும் நடைபெற மொத்த தமிழர்களின் வாழ்க்கையும் கண்ணீரில் மூழ்கியது.

வாத பிரதிவாதங்களுக்கிடையே தீர்மானத்தை கொண்டு வந்த நெவில் பெர்ணாண்டோ என்பவர் சொன்ன வாசகம் இங்கு குறிப்பிடத்தக்கது.

"காலிமுகத் திடலில் கமுக மரத்தில் கட்டி இரண்டாக கிழிக்கும் மரண தண்டனையை அமிர்தலிங்கத்திற்கு வழங்க வேண்டும்"

சொன்னது மட்டுமல்லாமல் அவருடன் மற்ற உறுப்பினர்கள் அடிக்க கையை ஓங்கிக்கொண்டு பாய்ந்து வந்தார்கள்.  தொண்டைமான் கத்திய கத்தல் எவர் காதிலும் விழுவதாக தெரியவில்லை.  இது தான் அமைதி வழியின் உச்சமும் சொச்சமும்.  காரணம் அவர்கள் சிங்கத்தை புணர்ந்து வந்த சிங்களர்கள்.  அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் இருப்பார்கள்.
சிவகுமரன் தொடங்கி வைத்த ஆயுதப் பாதையும் அமைதியாக கூட்டப்பட்ட தமிழ் மொழி மாநாட்டில் சிங்களர்கள், காவல்துறையினர் வேண்டுமென்றே உருவாக்கிய கலவரத்தின் விளைவாகத்தான் தொடக்கம் பெற்றது.  மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு என்றதும் ஆயுதப்பாதையின் தீவிரம் அதிகரித்தது.  ஆனால் சிவகுமரன் அதிர்ஷ்டம் என்பதற்கு சற்று கூட சம்மந்தம் இல்லாமல் பிறந்தவர்.  அவருடைய முயற்சிக்கு ஆயுதமும் ஒத்துழைக்கவில்லை.  உடன் இருந்தவர்களின் காட்டிக்கொடுப்பும் ஒரு காரணமாக இருந்து அவர் வாழ்க்கையும் முடிவு பெற்றது.

தொடர்ந்து வந்த குட்டிமணி ஜெகன், தங்கதுரை தொடங்கிய TELO அமைப்பும் கடைசியில் காட்டுக்கொடுப்பு மூலம் தான் ஒரு முடிவுக்கு வந்தது. இதில் சம்மந்தப்பட்ட இருவர்.

சீறீ சபாரெத்தினம், பிரபாகரன்.  ஆனால் இன்று வரையிலும் இதற்கு பின்னால் உள்ள விசயங்களையும் எந்த சரித்திரப்பக்கங்களும் பதிவு செய்யவில்லை.

ஜெயவர்த்னே, சாகடிக்கப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் மொத்த சவ ஊர்வலத்தை வெறியேற்றும் ஊர்வலமாக மாற்றி வெலிக்கடை சிறை முதல் மொத்த தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத கருப்பு ஜுலையை அறிமுகப்படுத்தினார்.

பிரபாகரன் தாக்கிய இராணுவ வாகனங்களும், சாகடிக்கப்பட்ட வீரர்கள் என்றாலும் இதற்குப்பின்னால் நடந்த நிகழ்வுகள் மொத்தத்திலும் கொடுமையானது.  அதுவே ஜெயவர்த்னே எப்படிப்பட்டவர் என்பதையும், தருணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டுருந்ததையும் நமக்கு புரியவைக்கும்.

இறந்த ராணுவ வீரர்களை சவப்பெட்டியில் வைத்து கொண்டு வராமல், சாக்கு மூட்டை போல இது தான் சிதைந்த கோரமான நம்முடைய வீரர்கள் என்று ஊர்வலமாக நடத்தி வெறியேற்றி தான் நினைத்ததை சாதித்து தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத அந்த கருப்பு ஜுலையை அறிமுகப்படுத்தினார்.

ஆனால் கருப்பு ஜுலை மூலம் ஜெயவர்த்னே தன்னை அறியாமல் போராளிகளுக்கு மறைமுக உதவியை செய்தார் என்றால் அது மிகையில்லை.  காரணம் இந்த ஜுலை கொடூரத்திற்குப் பிறகு தான் உலகம் முழுக்க பரவியிருந்த மொத்த புலம் பெயர்ந்த தமிழிர்களின் ஆர்வமும், ஆத்திரமும் ஒன்றாக கலந்து போராளிக்குழுக்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்யத் தொடங்கினார்கள்.  இதன் தொடர்ச்சியாக ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரன் சார்பாக முன் எடுத்துச் சென்ற அத்தனை முயற்சிகளும் சாதமாகத் தொடங்கியது.  பணவரவு அதிகரிக்க, தனிப்பத்திரிக்கை,வானொலி,பிரசுரங்கள், புத்தகங்கள் என்று தொடங்கி அதுவே நேரிடையான ஆயுத கொள்முதல் என்று வரைக்கும் பல்கிப் பெருகியது.  கடைசியில் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கு என்று கப்பல் வணிகத்தையும், சொந்த கப்பல்கள் என்று வரைக்கும் நீண்டது.

தொடக்ககால விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் எத்தனை தான் சர்வாதிகாரம் என்ற நோக்கில் பார்த்தாலும் அந்த சூழ்நிலையை அவருக்கு மறைமுக உணர்த்த காரணமாக இருந்தவர்கள் உள்ளே இருந்தவர்கள்.

கொள்கை என்பதை வைத்துக்கொண்டு கொலை கொள்ளையில் ஈடுபட்டவர்களும், கொள்கையாளர்கள் தன்னுடைய இருப்பை முதலில் உறுதிபடுத்திக்கொள்ளும் முக்கியவத்தை பிரபாகரன் உணர்த்திய போதெல்லாம் எள்ளி நகையாடினார்கள்.   அப்போது உணர்ந்தவர்கள் யாருமில்லை.  உணராதவர்கள் கூட அவரும் சேர்ந்து போக தயாராகவும் இல்லை.  வெட்டிப்பேச்சு, அரட்டை, விவாதம், ஒழுக்கக்கேடு போன்றவற்றில் மிக உறுதியாக இருந்ததும், அதுவே பலருக்கும் வெறுப்பாக தோன்ற பிரபாகரன் ஆளுமையும் தோற்றமும் மெதுமெதுவாக வளரத் தொடங்கியது.

தொடக்கத்தில் இயக்கத்தில் தோன்றிய பிரிவினையின் போதும், கருத்து வேறுபாட்டின் போதும் இலங்கையில் இருந்த கிறிஸ்துவ பாதிரிமார்களின் பங்கு அளவிடற்கரியது.  முடிந்தவரைக்கும் இயக்க ஒற்றுமையை உணர்த்த முற்பட்டார்கள்.  பிரபாகரன் வாழ்வில் கடைசி வரையிலும் அவர்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் நேரிடையாக மறைமுகமாக செய்தார்கள்.

பிரபாகரன் சர்வாதிகாரி என்று தொடக்கத்தில் அவருடன் ஒன்றாக சேர முடியாதவர்களும், பிரிந்தவர்களும் தொடங்கிய தொடக்க கால அவர்களின் மொத்த இயக்கமும் ஜனநாயகப் பாதையில் என்று சொல்லிக்கொண்டாலும் அங்கும் ஆயிரெத்தெட்டு புழுத்துப்போன குற்றச்சாட்டுக்கள்.  இதுவே உமா மகேஸ்வரனை அவருடன் இருந்த ஓட்டுநர் ஒருவரே கொல்லும் அளவிற்கு கரை கடந்து போனது. பிரபாகரனும், உமா மகஸ்வரனும் சென்னையில் வைத்து ஆன்டன் பாலசிங்கம் முன்னால் வைத்து பிரிந்து கொண்ட தருணம் தொடங்கி கடைசி வரையிலும் பிரபாகரன் எதிலும் குறிக்கிடவில்லை.  அவருக்கு நன்றாக தெரியும்.  இவர்கள் விரும்பும் ஜனநாயகமே இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் என்று.

அவரவருக்கு தன்னுடைய இருப்பும், தான் என்ற நோக்கமும் இருந்தாலும் இவர்கள் மொத்தமாக குற்றம் சாட்டிய பிரபாகரன் "ஆமாம். நான் சர்வாதிகாரி தான்" என்று தைரியமாக சொல்லிக்கொண்டு வெளியே சென்றும் தன்னை சார்ந்து வந்தவர்களை வைத்து தனியாக ஒரு இராணுவ ராஜ்ஜியமே அமைக்கும் அளவிற்கு வளர முடிந்தது.

தொடங்கியது முதல் ஒரே நோக்கம். கொள்கை. தீர்மானம்.  மாறவே இல்லை.

தன்னுடைய ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் போலவே தன்னுடைய இருப்பவர்களையும் அந்த அளவிற்கு கவனமாக பாதுகாத்து பயணித்தார்.  கொள்கைகளுக்கு தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமானது என்பதை நடந்து நிகழ்வுகள் மூலம் கற்றுக் கொண்டார்.  கற்றுக் கொடுத்துக் கொண்டே வந்தார்.  முரண்பட்டவர்கள் கதையும் முடிக்கப்பட்டது.

மொத்தமாக பல பாதைகளில் பயணித்து வந்த போராளிகளின் கொந்தளிப்பு வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணி தங்கதுரை போல, உச்சகட்டமாய் மாற (1983) அதே காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பித்தலும் நடந்தது.

ஆட்சியாளர்களுக்கு நாங்கள் யார்? என்பதை உணர வைத்த தருணம் அது.

இதை நாங்கள் தான் செய்தோம்.  இந்த வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என்று உள்ளுக்குள் இருந்த ஒவ்வொரு இயக்கத்திடமும் குடுமிபிடி சண்டை.  அப்போதும் இதில் சம்மந்தப்படாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தவர் பிரபாகரன்.   ஜனநாயகத்தையும் சர்வ அதிகாரத்தையும் நன்றாக புரிந்தவர்.

Wednesday, December 23, 2009

முதல் யுத்தம்

பிரபாகரன் என்பவரை இந்த நிமிடம் வரைக்கும் வளர்த்தது அவருடைய தன்னம்பிக்கை என்றாலும் அதற்கு மேலும் அவருடைய மூர்க்கத்தனத்தை முழுமையாக ஆளுமை என்று நம்ப வைத்ததிற்கு மறைமுக காரணம் ஜெயவர்த்னே என்றால் அது சற்று கூட மிகையில்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர இவரது கால தமிழர் தாக்குதல்கள் என்பதும் ஒப்பிடும் போது குறைவு.  இதுவே தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகவும், அச்சம் என்ற நிலைமையிலும் அவரை ஆதரிக்க வைத்தது.   இரண்டும் கலந்து நாள்பட பாசமாகவும் மாற்றம் பெறத் தொடங்கியது.
ஒவ்வொரு இலங்கை ஆட்சியளார்களும் உருவாக்கிய குறுக்கு வழிகளை பயன்படுத்திக்கொண்ட சிங்களர்கள் எவரும் இன்று வரையிலும் உலக அளவில் மிகப்பெரிய பங்களிப்புகளை தந்துவிடவில்லை.  இருந்தாலும் ஒப்பீட்டளவு என்று பார்த்தால் மிகக்குறைவு.  இதே நிலைமை தான் அரசாங்கத்திலும். சுதந்திரம் பெற்று இன்று வரையிலும் இலங்கையில் 60 வருடத்தில் எந்த சுயசார்பும் இல்லை.  ஒரு மரபணு சோதனை வசதியோ, நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வசதிகளோ என்று பல விசயங்களையும் உதாரணம் காட்டலாம்.  காரணம் மலையக தமிழர்கள் உருவாக்கிய தேயிலை வருமானம், தென்னை சார்ந்த, இயற்கை கொடையாக கொடுத்த துறைமுக வருமானம் என்பதாகத்தான் இன்று வரையிலும் வளர்ந்துள்ளது.

தமிழர்களை அழிக்க பயன்படுத்திய செலவுகளையும், வாழ்வாதாரங்களை சூறையாட பயன்படுத்திய சிந்தனைகளை ஒரு போதும் தன்னுடைய நாட்டு வளர்ச்சிக்கு இன்று வரையிலும் செலவிடப்படவில்லை.  அதுவும் சந்திரிகா ஆட்சி காலத்தில் பிச்சை எடுக்கும் அளவிற்கும் வந்தது.

மந்தப்புத்தி, குறுக்குவழி, மொத்த ஆட்சியாளர்களிடமிருந்த இனவெறி பார்வை என்று அவர்கள் வளராத வளர்ச்சிக்கு அவர்களே காரணமாக இருக்கின்றனர்.

தொடக்கத்தில் திருகோணமலையை அடிப்படையாகக்கொண்டு ஜெயவர்த்னே அமெரிக்க ஆதரவு நிலை எடுத்தார்.  அதுவே கால மாற்றம் பெற்று ராஜபக்சே சீனா ஆதரவு எடுத்துள்ளார்.  ஆட்சியாளர்கள் சுருட்ட முடிந்த அளவிற்கு உள்ளே உள்ள அடிப்படை சிங்களர்களின் வாழ்க்கைத் தரமும் அந்த அளவிற்கு உயர்ந்த நிலைமைக்கு வந்ததாக சொல்ல முடியாது?

"ஆதரவு கொடு. அவர்களை அழிக்கின்றேன்" என்று வந்த ஒவ்வொருவரும் இருவரையும் தான் அழித்தார்கள்.  ஆனால் தொடக்கம் முதல் யுத்த தர்மம் என்ற பார்வையில் சிங்கள மக்களை பிரபாகரன் கொன்றார் என்றோ தேவையில்லாத பிரச்சனைகளை செய்தார் என்று பார்த்தால் ஓப்பிட்டளவில் குறைவு.  ஆனால் ஆட்சியாளர்கள் இந்த விசயத்தில் மிகத் தெளிவு.

"உன்னைத் தாக்க எங்களால் முடியாது.  உன் இனத்தை ஒன்றுக்கு ஆயிரமாக தாக்குவோம்".  இதுவே தான் இன்றுவரையிலும். ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் இந்தியாவிற்கு தனிநாடு என்ற பிரபாகரன் கொள்கைக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவர்களை தங்களுக்கு சாதமாக எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு நோக்கம் மட்டுமே.   ஏறக்குறைய கருவேப்பிலை போல.

இலங்கை நாட்டின் ஒத்துழைப்பு வேண்டும்.  இலங்கை தமிழர்களை போராட்டங்கள் மூலம் திருப்தி படுத்த வேண்டும்.  இந்த இரண்டுங்கெட்டான் தான் இன்று வரையிலும்.

இது தமிழ்நாட்டில் இன்று வரையிலும் பலரையும் வாழ வைத்துக்கொண்டுருக்கிறது.

ஆனால் இலங்கை என்பது தொடக்கம் முதல் இந்தியா என்ற வல்லரசை பேயரசாகத் தான் பார்த்து வந்து கொண்டுருக்கிறது.  இன்று வரையிலும்.  1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருளுக்காக இறங்கிச் செல்ல அனுமதித்தது.

1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாவது விதி கூறுகிறது.  ஆனால் அது இன்று மீனவர்களின் விதியை தீர்மானம் செய்கிறது.

1964 ஆம் செய்த சிறீமாவோ சாஸ்திரி ஓப்பந்தம்படி இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்படும் தொழிலாளர்களை அது வரையிலும் பணிபுரிந்த இடத்தில் உள்ள ஊதியம், ஊக்கத்தொகை, ஓய்வுதியத் தொகை, அழைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்று இருந்ததும் அத்தனையும் அப்பட்டமாக மீறப்பட்டது.

அணிசேரா மாநாட்டில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த இலங்கை , இந்தியா கொண்டு வந்த அமெரிக்க படையை திருகோணமலையை விட்டு அனுப்பும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் ஜெயவர்த்னே போன்று எந்த நாட்டிலும் எந்த காலகட்டத்திலும் அப்பட்டமான தமிழர் எதிர்ப்பை மிகத் தைரியமாக ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டவர் எவரும் இல்லை. அத்தனை குரோதம், வெறுப்பு, காழ்புணர்ச்சி.  இந்தியா என்பது அவரைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு தான்.  கடைசி வரையிலும் எந்த மாற்றமும் இல்லை.
1961 ஆம் ஆண்டு முதிய வயதில் தந்தை செல்வா சிறையில் அடைக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா வெளியிட்ட அறிக்கையின் இறுதி வாசகம்.

" இந்த அறிக்கை விண்ணப்பம் பகை உணர்ச்சியால் எழுதப்பட்டது அல்ல. துக்கத்தின் மையினால் எழுதப்பட்டது. எனவே இந்த நீண்ட பேரணி மூலம் இனிமேலாவது இலங்கையில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம்"

அப்போது அறிஞர் அண்ணா ஐ.நா சபைக்கு மொத்த நிகழ்வுகளையும் தந்தியாக அனுப்பினார்.

1983 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டக்கல்லூரி மாணவர்களும், மற்ற அத்தனை கல்லூரி மாணவர்களும் நடத்திய கண்டன பேரணி காரணமாக டெல்லி வட்ட மேஜை மாநாட்டுக்கு வருகை தந்த ஜெயவர்த்னே தமிழ்நாட்டு வருகையை தவிர்த்து ஓடிப் பறந்தார்.

இலங்கை நல்வாழ்வு என்ற நோக்கத்தில் உணர்ச்சி வேகத்தில் முதன் முதலில் தீக்குளித்தவர் 21.6.1984 அன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஷாஜகான் (மதுரை மாவட்டம் நத்தம் என்ற ஊரில் பிறந்தவர்).  வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (கருணாகரன்) அடுத்து சென்னையில் இருந்த இலங்கை தூதரகம் முன்பு தீக்குளித்து கடைசியாக போராடி காப்பாற்றினார்கள்.

இதே ஆண்டில் எம்.ஜி.ஆர் பொது வேலைநிறுத்தம், கண்டன பேரணி, அமெரிக்க தூதரகத்தில் மகஜர் அளித்தல் என்று முடிந்தது. கலைஞர் கருணாநிதி எதிர்கட்சி தலைவர் பதவியை துறந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இதே ஆண்டில் ராஜினமா செய்தார்.

எம்.ஜி.ஆர் அளித்த பொருள் உதவியும், பழ. நெடுமாறன் அளித்த ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளை சுய சார்பு நிலைமைக்கு கொண்டு வர உதவியது.  இந்திரா காந்தி அளித்த ஆயுதப்பயிற்சி என்பது பிரபாகரன் வேண்டா வெறுப்பாக பயன்படுத்திக்கொண்ட விசயங்கள்.  காரணம் தொடக்கம் முதலே தன்னை மட்டும், தன் கொள்கைகளையும் மட்டுமே நம்பியவர்.  இந்தியாவை தொடக்கம் முதலே சந்தேகக் கண்ணோடு பார்த்தவர்.

ஆனால் பிரபாகரனை பொறுத்தவரையிலும் இந்தியாவை, தமிழ்நாட்டை எந்த பார்வையில் பார்த்து இருந்தாலும் அவருடைய முக்கிய வளர்ச்சியில் இன்று வரையிலும் இருப்பவர்கள் பழ. நெடுமாறன், திராவிடர் கழகம்.  ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு கூட மற்றவர்களைப் போல தங்களுடைய நாக்கு தடம் புரள இவர்கள் அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் சட்டத்திற்கு உட்பட்டு, தன்னால் செய்ய முடிந்ததை எவையெல்லாம் செய்தாரோ, அதே போல் இவர்கள் சட்டத்தின் படியும் சட்ட புறவாசல் வழியாகவும் தங்களுடைய ஈழ ஆதரவை பிரபாகரன் ஆதரிப்பு மூலம் வஞ்சகம் இல்லாமல் காட்டினார்கள். தொடக்க காலத்தில் திராவிடர் கழக வெளியீட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் காலப்பெட்டகம்.

இந்த ஒரு இடத்தில் தான் பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கு உள்ள பெரிதான வித்யாசங்கள் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. ஆனால் பிரபாகரன் போல் உமா மகேஸ்வரன் கூட புகழ்பெற்ற சிறை உடைப்பு சமாச்சாரங்களை நடத்தி உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்ததும் நிகழ்ந்தது.  இந்தியாவின் தலையீடும், இவர்கள் உருவாக்கிய குயுக்தியும் மொத்த பிரச்சனையும் உருவாக்கியது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.  அது தான் மாத்தையா வரை பலர் சாவதற்கும் காரணமாக இருந்தது.

வலியோடு வாழ்ந்தவர்கள் செய்த ஒவ்வொன்றும் அதிரடி தான்.  சந்தேகம் இல்லை. பெற்ற வலிகளும் அதிகம் தான்.  படித்தவர், படிக்காதவர், சம்மந்தம் இருந்தவர், இல்லாதவர் என்று அத்தனை பேர்களும் இலங்கை ஆட்சியாளர்களின் பார்வையில் அழிய வேண்டியவர்கள்.  இதுவரையிலும் நடத்தப்பட்ட தனி மனித படுகொலைகள் மொத்தமாக காரண காரியங்களோடு பார்க்க வேண்டியதை பின்னால் பார்க்கலாம்?

இந்த நோக்கம் ஒன்றே பிரபாகரன் கொண்டுருந்த கொடூர குணத்தை மக்கள் அங்கிகரிக்கத் தொடங்கினார்கள்.  அவரின் பார்வையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடப்பட காரணமாக இருக்கும் ஆட்சியாளர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.  அதே சமயத்தில் தன்னுடைய தனித்தன்மையையும், தங்களுடைய வளர்ச்சியையும் முன்னிலைபடுத்த வேண்டிய அக்கறையில் ஒவ்வொரு அடியும் மிகக் கவனமாக எடுத்துச் செல்ல வேண்டியதை முழுமையாக உணர்ந்து நகர்ந்தார்.
குடும்பம் என்று உருவான போதும் கூட அவருடைய எண்ணங்களில் எந்த மாற்றமும் உருவாகவில்லை.  குழந்தைகள் வந்த போதும் கூட அவருடைய திட்டமிடுதலில் எந்த குறைபாடும் காண இயலவில்லை.  வெறி என்பதே ஊறி, உணர்ந்து, உள்வாங்கி, ஒரு தனி மனிதராக வரி வசூல் முதல் உள் கட்டமைப்பு வரைக்கும் இயக்கம் தொடங்கிய முதல் ஏழு ஆண்டுகளுக்குள் சாதிக்க முடிந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

காரணம் இது வரையிலும் பதுங்கு தாக்கு என்ற கொரில்லா முறை மாறி முறைப்படி இராணுவ ரீதியான தாக்குதல்களும், இலங்கை தமிழர் போராட்டத்தில் முதல் யுத்தம் என்ற முறைப்படியான யுத்தம் இனி தொடங்கப்போவதும், இன்னும் இரண்டு வருடத்திற்குள் திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் காந்தி தலையிடல், ராஜிவ் காந்தி படுகொலை என்று தொடரப்போகிறது.

இந்தியா உள்ளே நுழைய சகோதர யுத்தங்களும், ரத்தச்சுவடுகளும் தனிப் பாதையில் பயணிப்பதும், விடுதலைப்புலிகளின் மொத்த கட்டுமாணம், ஆளுமை, வியப்பு, பயம், அச்சம் என்று இனி ஒருங்கே பயணிக்கப் போகிறோம்?

Tuesday, December 22, 2009

தீர்க்கதரிசனம்

ஜெயவர்த்னே ஆட்சியில் நடந்த உச்சத்தின் முதல் பகுதி யாழ்பாண நூலக எறிப்பு.  காகிதங்களை கொளுத்தி முடித்த பிறகு அடுத்து மனிதர்கள்.  சமயம் பார்த்துக் கொண்டுருந்தவர் பிரபாகரன் தாக்குதல்களால் இறந்த இராணுவ வீரர்களை இறுதி அஞ்சலி என்ற போர்வையில் வலம்வரச் செய்து வெறீயூட்டும் நிகழ்வும் நடந்தது.  சாதரணமாகவே காத்துக்கொண்டுருந்த அத்தனை சிங்களர்களும், காவல்துறையும் ஆழித்தீயின் கோரத்தாண்டவம் போல் ஆடித்தீர்த்தனர்.
உலகமெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரபாகரனுக்கு பணமாக பொருளாக ஆதரவுக் கரம் நீட்டியதற்கு பல காரணங்கள்.  அச்சம், மிரட்டல், ஆதரவு, பாசம், வேறு எவரும் இல்லை, வேறு வழியில்லை.  இந்த ஆறு காரணங்களும் ஒன்றாக சேரச்சேர அவருடைய வளர்ச்சி 1978 முதல் 1984க்குள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு வளர்ச்சி பெற்று தனியாக ஆயுதக் கொள் முதல், தனியாக கப்பல் போக்குவரத்து,போன்ற அத்தனை உள்கட்டமைப்பு உள்ள இராணுவ வளர்ச்சியாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொண்டே வந்தது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அப்போது இருந்த மற்ற இயக்கங்கள் உமா மகேஸ்வரன் PLOTE.  சிறீ சபாரெத்தினம் தலைமையில் TELO. பத்மநாபா தலைமையில் EPRLF. கடைசியாக EROS  என்ற அமைப்பும் லண்டன் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுக்கொண்டுருந்தது. அவவ்போது பிரபாகரனால் நடத்தப்பட்ட தனி மனித தமிழர் படுகொலை என்பது தண்டணை என்பதாக இருந்ததே தவிர சகோதர யுத்தம் என்பதாக மாற்றம் பெறவில்லை.  காரணம் அதுவரைக்கும் இந்தியா உள்ளே நுழையவில்லை.

மற்றவர்களுக்கும் பிரபாகரன் போராளிகளுக்கும் உள்ள வித்யாசம், தாக்குதல்கள் ஒவ்வொன்றும் துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது.  ஆனால் அதன் மொத்த விளைவுகளையும் மக்கள் சந்திக்க நேர்ந்தது. இந்த கருப்பு ஜுலையின் கோரத்தின் கொல்லப்பட்ட தமிழர்களும், இழந்த சொத்துக்களும், அகதிகளாக தப்பி வந்தவர்களும் கணக்கில் அடங்கா.  இது போக இராணுவ பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி தங்கதுரை உள்ளே இருந்தவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களும், கண்ணீர் வரவழைக்கும் கோரச் சுவடுகளும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஜுலை மாதமாக ஆனது.

மக்களின் துன்பம் ஒரு வகையில் இந்தியாவின் பார்வையிலும், தமிழ்நாட்டின் பார்வையிலும் பட அது வேறு வகையில் பிரபாகரனுக்கு உதவியாய் இருந்தது.  அதுவே ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆர். தமிழீழம் என்ற கனவு அடைய எவ்வளவு செலவாகும்? என்று கேட்கும் அளவிற்கு.  அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். "தனி நாடு தான் இனி தீர்வு" என்பதை மனப்பூர்வமாக நம்பியவர்.

ஆனால் மொத்த தாக்குதல்களையும் அமிர்தலிங்கம் இந்திரா காந்தியிடம் வந்து சொன்ன போது, தனிநாடு என்ற கோரிக்கையை விட சுயாட்சிக்கு ஆதரவு தயார் என்பதாக மாற்றம் பெற்றது.  அமிர்தலிங்கம் மொத்த கதையையும் சொன்ன போதும் கூட வேறு வழியில்லை என்பதாகத் தான் பேச்சுவார்த்தைக்கு அமிர்தலிங்கம் முன்வந்தார். இதன் தொடர்ச்சியாக திம்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

எம்.ஜி.ஆர் ஒரு பக்கம், கலைஞர் ஒரு பக்கம், பழ, நெடுமாறன் ஒரு பக்கம்.  தமிழ்நாட்டில் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டமும், கடல் வழியாக நாங்கள் இலங்கைக்குச் செல்கிறோம் என்ற நெடுமாறன் பயணமும் என்று மொத்தமாக தமிழ்நாடு இலங்கை ஆதரவு நெறி கட்டிக்கொண்டுருந்தது.  அப்போது கலைஞர் சொன்ன வாசகம்

" பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்துக் கொடுப்பதைப் போல தமிழர்களுக்கு தமிழீழம் தான் இனி ஒரே தீர்வு"

இந்திரா காந்தியின் சார்பாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ் கொழும்பு சென்றபோதும் கூட ஜெயவர்த்னே அவமானபடுத்தியோடு அசைந்து கொடுப்பதாகவும் இல்லை. இதை பிரபாகரன் கவனித்துக்கொண்டுருந்தாலும் உள் மனம் "சிங்களர்களை தவறாக இந்தியா பார்த்துக்கொண்டுருக்கிறது"  என்பதாக தன்னுடைய பாதையில் மிகக் கவனமாக இருந்தார். அவரின் ஆயுதப்பாதையும் ஒரு பக்கம் வலுவடைந்து கொண்டுருந்தது.

இதே சமயத்தில் விடுதலைப்புலிகளின் மொத்தக் கோட்பாடுகளின் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளல் கூடாது என்ற கொள்கை பிரபாகரன் மீறும் சூழ்நிலை உருவானது.  காரணம் 1983 கருப்பு ஜுலை கலவரத்தின் காரணமாக பெரதேனியா பல்கலைகழகத்தின் பயின்று வந்த மொத்த தமிழ் மாணவ மாணவியர்களும் எங்களை யாழ்பாண பல்கலைகழகத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.  காரணம் ஏற்கனவே நடந்த கலவரத்தில் திட்டமிட்டு தமிழ் மாணவ மாணவியர்கள் அத்தனை பேர்களும் தாக்கப்பட்டனர்.  இதன் பொருட்டு மாணவிகள் (  ஜெயா, லலிதா, வினோஜா, மதி என்கிற மதிவதனி) சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் தொடங்க, பிரபாகரன் பார்வைக்கு வந்த அவர்களை கட்டாயப்படுத்தி தமிழ்நாட்டு அழைத்து வந்தனர்.
அப்போது தமிழ்நாட்டில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்திடம் "மதிவதினியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக" சொன்ன போது முதலில் யாரும் நம்பும் சூழ்நிலையில் இல்லை. காரணம் ஏற்கனவே உமா மகேஸ்வரன் பிரச்சனை, அது போக போராளிகள் எவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பிரபாகரன் உருவாக்கிய வைத்திருந்த கட்டளை, இதன் பொருட்டு உள்ளே போராளிகளாக இருந்தவர்களின் மொத்த அபிலாசைகளும் தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் என்று மொத்தமாக ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியது.

இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், மதிவதினியிடம் நேரே பேச தயங்கி ஆன்டன் பாலசிங்கம் மூலம் ஒரு புரிந்துணர்வை உருவாக்கியதும், மொத்த போராளிகளிடமும் கலந்து பேச வைத்து அவர்களின் சம்மதத்தையும் பெற்று, பல சங்கடங்களையும் கடந்து சென்னை திருப்போரில் (1984 அக்டோபர் 1).  மதிவதினியின் பெற்றோர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தேடப்படும் தீவிரவாதியின் மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவர்கள் அத்தனை பேரையும் வைத்து அலசி ஆராய்ந்துவிட்டு அமைதியாக நடந்தது.
காதல் கல்யாணம் என்பதுடன் ஜாதி மறுப்பு என்கிற நிலையிலும் அமைந்தது.  அதைத் தொடர்ந்து போராளிகள் திருமணம் என்ற வாழ்க்கையும் நடைபெறத் தொடங்கியது.  தாமதம் என்றாலும் வரும் காதலை எவரால் தடை போட முடியும்?

அப்போது சீறீ சபாரெத்தினம் தலைமையில் இயங்கிக்கொண்டுருந்த டெலோ இயக்கம் மட்டும் இயக்கத்தில் பெண்களை இணைத்து இருந்தனர்.  ஒரு பாதிரியார் உத்தரவின்படி பிரபாகரன் அதற்குப் பிறகு படிப்படியாக பெண்களை இயக்கத்தில் சேர்க்க ஆர்வம் காட்டினார்.

முதன் முறையாக இந்த சமயத்தில் அனிதா பிரதாப் என்ற பெண் பத்ரிக்கையாளர் பிரபாகரனை சந்தித்ததும், அவர் மூலம் முன்பே இந்த ஜுலை கருப்பு தினத்தை உலகம் முழுக்க பரப்பியதற்காக அவருக்கு பிரபாகரன் நன்றி சொன்னதும், இயக்கத்தில் உள்ளவர்களின் ஓழுக்க ரீதியான முன்னேற்பாடுகளை பார்த்து அனிதா பிரதாப் வியந்து நின்றதும், அத்துடன் பிரபாகரன் அன்று சொன்ன வாசகம் அவரின் தீர்க்கதரிசனத்தையும் பறைசாற்றியது.

இப்போதைய சூழ்நிலையில் இந்தியா எல்லா உதவிகளையும் உங்களுக்குச் செய்கிறது.  உங்கள் போராளிகளுக்கு பயிற்சி முகாம், தமிழ்நாட்டில் உங்களுக்கு பண உதவி என்று எல்லாபக்கமும் உதவி என்பதை எவ்வாறு கருதுகிறீர்கள் என்று கேட்ட போது பிரபாகரன் சொன்ன பதில்.

”இப்போது எங்களுக்கு இந்தியா செய்கின்ற உதவி எங்கள் சுதந்திரத்திற்காக அல்ல.  அவர்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக.  இலங்கையை பயமுறுத்தி வைப்பதற்காக.  இதே இந்த இந்தியாவுடன் நாங்கள் எதிர்காலத்தில் போரிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்"

காரணம் அன்னை இந்திரா காந்தியின் இறப்பும், மக்கள்தலைவர் எம்.ஜி.ஆர் இறப்பும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வுரிமை போராட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது என்றால் அது மிகை இல்லை.  அதுவே தனிப்பட்ட முறையில் பிரபாகரனின் வளர்ச்சிக்கும், ஆளுமைக்கும் , அவரை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் அதுவரையிலும் நடந்து நிகழ்வுகளில் இருந்து மற்றவர்களைவிட சற்று புத்திசாலித்தனமாய் சுயசார்பு என்ற நிலையையும் எட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Sunday, December 20, 2009

வெறித் தீ

யாழ்பாணத்தில் நடக்கும் மாவட்ட சபை தேர்தலில் ஜெயித்து விட வேண்டும் என்று தன்னுடைய சீடர்களான சீறீ மாத்யூ, காமினி திசநாயகா போன்ற அமைச்சர்களை ஜெயவர்த்னே அனுப்பி வைத்தார். அவர்கள் உருவாக்கிய கலவரங்கள் (1981), கடைத்தெரு முதல் யாழ்பாண மார்க்கெட் வரைக்கும் பரவியது. எறிவதை அணைக்க முயற்சிப்பவர்களை எறியும் தீயில் தள்ளி எறியூட்டப்பட்டனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணி முன்னாள் எம்.பி வெற்றிவேல் யோகேஸ்வரன் வீட்டை காவல்துறை முற்றுகையிட்டு வீட்டை கொளுத்த, மயிரிழையில் உயிர் தப்பி மனைவியுடன் பின் வாசல் வழியாக தப்பினார்.  மொத்த அலுவலகத்தையும் சூறையாடப்பட்டது.

1981 ஜுன் 1.

யாழ்பாண நூலகம் மொத்த கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. சிங்கள இனவாதிகள் மேற்பார்வையிட, காவல்துறையினர், சிங்கள இளைஞர்கள் என்று பெரிய கும்பல் கோரத்தாண்டவம் ஆடியது.  உள்ளே இருந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல். அரிய சுவடிகள் முதல் ஏராளமான தமிழ் புதையல் அது.  ஆசியாவிலேயே முதன்மையானது.
ஆசியாவில் இதற்கு முன்னால் நடந்த கோரச்சுவடுகள்.

போர்த்துகீசியர்களால் (1619) எறிக்கப்பட்ட தமிழ்நாட்டு சரஸ்வதி மகால். 12ம் நூற்றாண்டில் நாலாந்தா பல்கலைக்கழகம்.  ஹிட்லர் படையெடுப்பின் போது நூலகத்தை தவிர மற்றவற்றை கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்.  ஆனால் இவர்களோ ஹிட்லரையும் மிஞ்சி விட்டனர்.

இவர்களின் வெறியின் தொடர்ச்சியாக பருத்தித்துறை (1984) ஹார்ட்லி பல்கலைக் கழகத்தில் இருந்த புத்தகங்கள், வல்வெட்டித்துறை நூலகம், ஈழவேந்தனின் தனிப்பட்ட அக்கறையின் பால் உருவாக்கி வைத்திருந்த (1977) ஆவண காப்பகம்,  சிவ சிதம்பரத்தின் (1983) பொக்கிஷங்கள் என்று தொடர்ந்த மொத்த தமிழர்களின் எந்த வரலாற்றுச் சுவடும் இருந்து விடக்கூடாது என்பதில் பிரத்யோக கவனம் செலுத்தினர்.

தமிழறிஞர்கள், மூத்தவர்கள் என்று எவரும் பாரபட்சம் இல்லாமல் சிறையில் அடைத்தனர்.  காந்திய இயக்கம் என்று நடத்திக்கொண்டுருந்த டேவிட், இராஜசுந்தரம் என்பவர்களை திடீர் என்று கைது செய்து,  சிறைக்கு இழுத்துச் சென்று அங்கு தேக்கி வைத்திருந்த நீரில் இரவு முழுவதும் முழு நிர்வாணமாக நிற்க வைத்து, ஊர்ந்து வரச்செய்து, மொத்த வெறியையும் தணித்துக்கொண்டனர். இது போல் ஆயுதப் பாதையில் சம்மந்தம் இல்லாத பலரும் பலவிதமான சித்ரவதைக்குள்ளானர். யாழ்பாண நூலகம் எறிவதைக் கேட்ட மாத்திரத்தில் பாதர் ரெவண்ட் அந்த இடத்திலேயே மாரடைப்பால் காலமானார்.

காந்திய இயக்கத்தின் டேவிட் அவர்களால் எழுத்தப்பட்ட தனி இதழ்கள் மொத்த விடுதலைப்புலிகளின் சாதக பாதக அம்சங்களை சுட்டிக்காட்டுவது போல, தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம் குறித்து மொத்த புரிதல்களையும் உருவாக்குகிறது.  ஏறக்குறைய இன்றைய தமிழ்நாட்டு புலனாய்வு கட்டுரை போல அமிர்தலிங்கத்தின் மொத்த நிறை குறைகளையும், அவர் அடைந்த ஆதாயங்களையும் பாரபட்சம் பார்க்காமல் அடித்து துவைத்து காயப்போட்டுருக்கிறார்.

இந்த நூலகத்தீ என்ற "கலாச்சார பேரழிவு" மொத்த தமிழ்மக்களையும் ஆயுதப்பாதையை ஆதரிக்க வைத்தது என்பதில் மிகையில்லை. ஆனால் மக்கள் இன்னமும் அமிர்தலிங்கம் மூலம் முடிவு வந்து விடும் என்று நம்பிக்கை வைத்துருந்ததும் கலையத் தொடங்கியது. தந்தை செல்வா ஒவ்வொரு இலங்கை சுதந்திர தினத்தை தமிழர்கள் கருப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற கொள்கையை அமிர்தலிங்கம் மாற்றியது, அவர் முழுமையாக அரசாங்க சார்பாளராக மாற்றம் பெற்று வந்து கொண்டுருந்ததை உணர்ந்த பிரபாகரன் இனி நம்முடைய முயற்சியை முழுமையாக மாற்ற வேண்டுமென்று தொடங்கியது தான் மற்றொரு புதிய ஆயுத தாக்குதல்.

ஜெயவர்த்னே (1982 செப் 29) தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்பாணம் வந்த போது கடற்படையினர் பயணித்து வந்த ஜீப்புக்கு குண்டு வைக்க அது தோல்வியில் முடிந்தது. ஜெயவர்த்னே மீண்டும் ஜெயித்து இரண்டாவது முறையாகவும் ஆட்சியில் அமர அக்டோபர் 27 சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையில் (மாத்தையா,புலேந்திரன் அடங்கிய எட்டு பேர் குழு) தாக்க, காவல் துறையினரால் திருப்பிச் சுடப்பட்ட போது குண்டுகள் பாய்ந்தும் தப்பிவிட்டனர். ஆனால் இராணுவத்தினரில் தொடர் முயற்சியில் பிடிபட்ட சங்கர் தப்பிக்க பாய்ந்த குண்டு உயிரைப்பறித்தது.  அந்த சங்கரின் இறப்பு தினம் தான் பின்னாளில் மாவீரர் தினமாக மாற்றம் பெற்றது.

மற்ற இயக்கங்களின் வளர்ச்சியையும் வழிமுறைகளையும் பார்த்துக்கொண்டே வந்த ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் சர்வதேச தொடர்பாளாக மாற்றம் பெற்று உலகத்தமிழர்களிடம் பிரபாகரனை கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றினார்.  அதுவே பின்னால் ஆயுதம் முதல் கப்பல் வணிகம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. விடுதலைப்புலிகளின் மொத்த உலக ஆயுத கொள்முதல் சார்பாளராக கேபி என்ற கே பத்மநாபன் 1984 முதல் செயல்படத்தொடங்கினார்.

ஜெயவர்த்னே இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது அமிர்தலிங்கம் தமிழர்களின் சார்பாக எவரையும் நிறுத்தாமல் இருந்த முதல் காரணமும், அதுவே அதிகாரமற்ற உள்ளாட்சி தேர்தலை தமிழர்களை புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய "தமிழர் விடுதலைக் கூட்டணி" தேர்தலில் நிற்போம் என்று கூறியதும் மொத்தமாக அமிர்தலிங்கம் "தமிழர்களின் எதிரி" என்று விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டார்.  காரணம் அப்போது விடுதலைப்புலிகளின் அறைகூவலை கேட்ட அத்தனை வேட்பாளர்களும் பயந்து விலகிக்கொண்டனர். எதிர்ப்பை மீறி நின்ற இரண்டு வேட்பாளர்களுக்கு விடுதலைப்புலிகளின் சார்பாக மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

நடந்த தேர்தலில் பருத்தித்துறை, வெல்வெட்டித்துறை இரண்டு இடங்களிலும் பதிவான வாக்கு வெறும் 2 சதவிகிதம்.  மற்ற அத்தனை இடங்களிலும் வாக்கு சதவிகிதம் இந்த அளவிற்குக்கூட இல்லை.  அமிர்தலிங்கம் விடுத்த அறைகூவலை மக்கள் ஏற்கத்தயாராய் இல்லை என்பதற்கு காரணம் அச்சம் ஒரு பக்கம். விரக்தி மறு பக்கம்.

33 பேர்கள் இருந்த இயக்கத்தில் சங்கர், ஆனந்தன், சீலன் ஆகிய மூன்று பேர்களும் நடந்த தாக்குதல்களில் உயிர் இழக்க இனி தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று நிணைத்துக்கொண்ட பிரபாகரன் நடத்திய நேரிடையான கண்ணிவெடித்தாக்குதல்களில் பலியான ராணுவ வாகனமும் (திருநெல்வேலி), கைப்பற்றிய ஆயுதங்களும் பெரும் நம்பிக்கையை தந்தாலும் தாக்குதலில் இறந்த செல்லக்கிளி என்பவர் கண் எதிரே இறந்த போது முதன் முறையாக பிரபாகரன் கண்களில் இருந்த கண்ணீர் வந்தது.

இந்த தாக்குதல்களினால் இறந்த ராணுவ வீரர்களின் சடலங்களை கொழும்புக்கு கொண்டு சென்ற போது அது வரையிலும் (1983 ஜுலை 24) தமிழர்களின் வாழ்க்கையில் பார்த்திராத கருப்பு தினமும் விடிந்தது.

Saturday, December 19, 2009

திருப்புமுனை தி.நகர்

"மக்கள் இயக்கம்"  என்று மாறவேண்டிய அவஸ்யத்தை உமா மகேஸ்வரன் சொன்ன போது "அது காலப்போக்கில் வெறும் அரசியல் கூச்சல் இயக்கமாக மாறிவிடும்" என்று வாதப் பிரதிவாதிகளைத் தொடர்ந்து பிரபாகரன் மொத்தமாக ஆயுதங்களை ஓப்படைத்து விட்டு வெளியேறிய நேரம்.  "முடிவு ஒருவர் மட்டுமே எடுக்க வேண்டும்.  செயலில் மட்டுமே இயக்கப் போராளிகள் பங்கெடுக்க வேண்டும்"  என்ற நோக்கமுள்ள பிரபாகரன் தனியாக புதிய நிர்மாணம் செய்ய முயற்சித்துக்கொண்டுருந்தார்.  இதே சமயத்தில் அமிர்தலிங்கம் உருவாக்கிய சமாதானமும் எடுபடவில்லை.

வெளியே வந்தவரை டெலோ இயக்கத்தில் தங்கதுரை இணைத்துக்கொள்ள, இயக்கத்தில் இருந்த குட்டிமணி பிரபாகரனை இயக்கத்தின் பயிற்சி பொறுப்பாளாராக நியமித்து தனியாக ஆயுதங்கள் கொடுத்தார். இதன் தொடர்பாக போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதற்காக (1980)  திருச்சியிலும் மதுரையிலும் முகாம் அமைக்கப்பட்டது. " மற்றொரு இயக்கத்திற்கு அதன் வலிமைக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறோம்" என்று மனதிற்குள் இருந்த ஆதங்கம் "தான் தன்னுடைய" என்ற சிந்தனைக்கு வித்திட்டது.

அப்போது இருந்த பொருளாதார நெருக்கடியில் தோன்றியது தான் "இனி ஆயுதங்கள் வாங்க செலவழிக்கக்கூடாது.  எதிரிகளிடம் இருந்தே கைப்பற்றவேண்டும்".

தொடர்ச்சியான அரசாங்கத்தின் தேடலின் காரணமாக குட்டிமணியும் தங்க துரையும் இந்தியாவிற்கு தப்பி வர முயற்சிக்க பருத்திதுறைக்கு அருகே உள்ள மணல்காடு என்ற இடத்தில் வைத்து ஆட்சியாளர்களால் கைது செய்யப் பட்டனர்.  கொண்டு வந்த விட்டவர் சீறீ சபாரெத்தினம்.   படகு ஏற்பாடு செய்து இருந்தது பிரபாகரன்.  இவர்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்து இந்த விசயம் காவல்துறைக்கு தெரிந்த காரணத்தால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனி விமானத்தில் இருவரையும் கொழும்பு கொண்டு சென்றனர். பின்னாளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீட்டு காரணமாக சிறையில் இருந்தவர்களை உருவான கலவரத்தில் உள்ளே இருந்த சிங்கள கைதிகள் 53 பேர்களை கொன்று , தமிழீழத்தை என் கண்களாவது பார்க்க வேண்டும் என்று சொன்ன கண்களை நோண்டி எடுத்து காலில் போட்டு மிதித்ததும் நடந்தது.

ஜெயவர்த்னே மொத்த இயக்க தடைகளையும் தீவிரமாக கண்காணித்துக்கொண்டுருந்த தருணம் அது.   டெலோ இயக்கத்தில் இருந்த மற்றவர்களும் பிடிபட மொத்தமாக இயக்கம் முடங்கிப்போயிருந்தது.  தேடலும், துரத்தலும் அதிகமாக பிரபாகரன் சென்னைக்கு வந்து (1981) வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார்.  அப்போது  பிரபாகரன் கொள்ளைகையை மீறீ உமா மகேஸ்வரன் PLOTE என்ற தனி இயக்கம் (1980) தொடங்க, அப்போது தோன்றிய மற்ற இயக்கம் EROS.  இதில் இருந்து விலகிய பத்பநாபா,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உருவாக்கிய இயக்கம் EPRLF (Ealem People Revolutionary Left Front).
இயக்கத்தின் கொள்கைகளை அறிக்கையாக்க தட்டெழுத்துப் பயிலகத்திற்கு வரும் உமா மகேஸ்வரன் அங்கு இருந்த ஊர்மிளா என்ற பெண்ணுடன் தொடர்பு உண்டாக, அதுவே உறவு வரைக்கும் தொடர, அதை பலரும் பார்க்க வேண்டிய சூழ்ந்லையில் சந்தர்ப்பங்கள் அமைந்து விட மொத்தமாக பிரச்சனை வெடித்தது.  ஊர்மிளா விதவைப்பெண்.  உமா மகேஸ்வரன் ஏற்கனவே உறவு பெண்ணுடன் திருமணம் என்ற தொடக்க முயற்சியில் இருக்க ஒன்றுடன் ஒன்று இயக்கத்திற்குள் பல கேள்விகளை எழுப்பியது.

பிரபாகரனின் இயக்க கொள்கையான ஓழுக்கம் என்பதை விட ஓழுக்கக்கேடாக மாற்றம் பெற உண்டானது அடுத்த மோதல்.  ஆன்டன் பாலசிங்கம் சமாதானம் எடுபடவில்லை. விலக்கப்பட்ட உமா மகஸ்வரன் தனியாக PLOTE என்ற இயக்கம் பிரபாகரன் எதிர்ப்பையும் மீறி தொடங்கப்பட்டது.  பிரபாகரனின் கொள்கை "இயக்கத்தில் இருந்து வெளியேறினால் புதிய இயக்கம் தொடங்கக்கூடாது".

வெளியே வந்த உமா மகேஸ்வரன், தனியாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  அப்போது பிரபாகரன் டெலோ இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுருந்தார்.  வெளியே செயல்பட்டுக்கொண்டுருந்த உமா மகேஸ்வரனுடன் இருந்த  சுந்தரத்தை, பிரபாகரன் உத்தரவின்படி சத்தியசீலன் சுட்டுக்கொன்றார்.  காரணம் வெளியேறியவர்கள் தாங்கள் தொடங்கிய "புதிய பாதை" என்ற செய்திதாளின் மூலம் அப்போது பிரபாகரன் உருவாக்கிக்கொண்டுருந்த விடுதலைப் புலிகளைப்பற்றியும், பிரபாகரன் பற்றியும் வசைமாறி பொழிந்து கொண்டுருந்தனர்.

இது போக பிரபாகரன் பிரிந்த சமயத்தில் மொத்த ஆயுதங்களையும் தனியாக எடுத்து பதுக்கியவர் இந்த சுந்தரம்.  டெலோ முடங்கி விட்டது என்று உமா மகேஸ்வரன் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டுருந்த போது இறந்த சுந்தரத்தைப் பார்த்து தன்னையும் இனி சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று தமிழ்நாட்டில் வ்நது தஞ்சம் புகுந்தார்.  பிரபாகரனும் அதி முக்கிய குற்றவாளி என்ற அரசாங்கத்தின் தேடல் தீவிரமானதைத் தொடர்ந்து தப்பித்து வந்து வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார்.

ஏற்கனவே இலங்கையில் நடந்து சமாதான உடன்படிக்கை பிரபாகரன் உமா மகேஸ்வரன் இருவரிடத்திலும் சரியான புரிந்துணர்வை உருவாக்காத காரணத்தால் ஆன்டன் பாலசிங்கம் இந்த முறை இருவரும் சென்னையில் இருப்பதால் நேரிடையாக தன்னுடைய மனைவி அடேலுடன் வந்து உருவாக்கிய போதும் பிரபாகரன் அசைந்து கொடுக்கவில்லை.  ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்வதில்லை என்று பிரிந்தனர். அப்போது உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி நான் LTTE யை சொந்தம் கொண்டாட மாட்டேன் என்று உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதி.

பிரபாகரன் ஒதுங்கினாலும் சுந்தரம் கொலைக்குப்பிறகு தானும் சாகடிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருந்த உமா மகேஸ்வரன் , பிரபாகரனை தீர்த்துக்கட்ட சமயம் எதிர்பார்த்து காத்துருக்க வேறொரு புதிய சூழ்நிலை உருவானது.

சென்னை தி.நகரில் உணவகத்தில் இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரன் அவருடன் இருந்த கண்ண்ன், சாலையில் நடந்து வந்து கொண்டுருந்த பிரபாகரனை பார்த்து விட தன்னை கொல்லவருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு உமா மகேஸ்வரன் துப்பாக்கியை எடுக்க அதற்குள் பிரபாகரனின் தோட்டா சீறிப்பாய்ந்தது.  குனிந்து தப்பிக்க இருவரும் (மே 19 1982) பாண்டிபஜார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  எதிர்காலத்தில் பிரபாகரன் என்ற பெயர் எந்த அளவிற்கு உலகம் முழுக்க பரவும் என்பதை அன்று உணர்ந்திராத காவல் துறையிடம் (இன்ஸ்பெக்டர் நந்தகுமார்) தன்னுடைய பெயராக பிரபாகரன் சொன்னது தான் கரிகாலன்.

அன்று வாங்கிய கைரேகை மற்ற அடையாளம் ஒன்று மட்டுமே பிரபாகரன் இறப்பு என்ற சொல்லப்படுகின்ற கடைசி வரைக்கும் ஒப்பிட பயன்பட்டது.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அக்கறையாக இந்த கைரேகைகளை இலங்கைக்கு எடுத்துக்கொண்டு பயணித்தார் ஒரு தனி அதிகாரி.
அப்போது அரசாங்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். பார்வைபட்டதும், வள்ளல் பெயரை நீரூபித்ததும், ஆதரவுக்கரம் கொடுத்ததும், ஜெயவர்த்னே அமெரிக்க ஆதரவு போக்கை மட்டுப்படுத்தி பயமுறுத்த உருவாக்கி இருந்த RAW (Research and analysis Wing) அமைப்பு மூலம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலமாக இந்தியாவில் போராளிகளுக்கு பயிற்சி முகாம் ஏற்படுத்திக்கொடுத்ததும் இதன் தொடர்ச்சியாக.
காரணம் அன்றைய தினம் பிரபாகரன் தலைக்கு இலங்கை அரசாங்கம் வைத்திருந்த விலை 10 லட்சம்.  மேலும் 1973 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது இதேபோல் குட்டிமணியை இலங்கை அரசாங்கத்திடம் கலைஞர் ஒப்படைத்தது போல் வீணான பிரச்சனைகளை எம்.ஜி.ஆர் உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

காரணம் தமிழ்நாட்டில் அப்போது ஈழ ஆதரவு கொளுந்து விட்டு எறிந்து கொண்டுருந்த தருணம் அது.

காவல்துறையின் கட்டளையின்படி ஏழுமாதங்கள் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்ததும், அப்போது உருவான பழ.நெடுமாறன் உதவியும் பிரபாகரனுக்கு எல்லாவிதங்களிலும் வளர உதவியது. மற்ற இயக்கங்கள் மறைந்து   செயல்படாமல் முடங்கிக் கொண்டுருந்தது. தனித்தன்மையாக LTTE புதிய நிர்மாணம் தொடங்கிய காலம்.  "தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும்" என்ற பிரபாகரன் கொண்டுருந்த கொள்கைக்கு மக்கள் ஆதரவு கிடைக்க ஆண்டு கொண்டுருந்த ஜெயவர்த்னே மற்றொரு காரியம் செய்தார்.  இவர்களின் உள் குழப்பங்களைப் போலவே உலகமே காறித்துப்பும் உலகப் புகழ்பெற்ற யாழ்பாண நூலகத்தை தீயிட்டு மகிழ்ந்தார்.

Friday, December 18, 2009

அரசியல் ஞானி

ஆசையை வெறுத்து அடையப் பெற்றது புத்த ஞானம்.  ஆனால் அழிவை கண் எதிரே கண்டு ரசித்து ருசித்து தொடர்ந்து கொண்டுருந்தவர் அரசியல் ஞானி ஜெயவர்த்னே. ஒரு பக்கம் மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமான்.  அவருக்கு அமைச்சர் பதவி.  அவருடன் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி.

இது போக தன்னுடைய கட்சி சிஷ்ய கோடிகளான சிங்கள இனவாதிகளான அதுலத் முதலி, சிறீல் மாத்யூ போன்றவர்கள்.  மறைமுக ஆட்சியாளர்களான புத்த பிக்குகள்.  இது போக தன்னுடைய பதவிக்கான அபிலாஷைகள் என்று நான்கு பக்கமும் சுழன்று சூறாவாளியாய் செயல்பட்டுக்கொண்டுருந்தார்.

சிரிக்காத முக லட்சணம் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் சிந்தனைகள் அதிகம் பெற்றவர்கள் போல் அவருடைய ஒவ்வொரு நிகழ்வுகளும் தமிழர்களுக்கு ஓராயிரம் இடியாய் இறங்கிக்கொண்டுருந்தது.  இத்தனைக்கும் தொண்டைமான், அமிர்தலிங்கம் அரசில் இருந்தனர்.
1977 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களில் மொத்தத்தையும் இழந்து கொழும்பு அகதிகள் முகாமில் இருந்த மலையகத் தமிழர்களை அவர்களுடைய பழைய வாழ்விடங்களுக்கு அழைத்து வந்து அப்போது தொண்டைமான் சொன்ன வாசகம். " இனி எப்போதும் பூர்வகுடி தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்".  அதற்கான காரணம் அவருக்கு மட்டும் தெரிந்த ரகஸ்யம்.  ஆனால் கேள்விகள் ஏதுமின்றி அவர்களும் எம்.ஜி.ஆர் போல் அவரை நம்பிக்கொண்டுருந்த காலம்.

" உங்களுக்கு இனி விடிவு காலம் வந்துவிட்டது.  தேர்தல் மூலம் ஜெயவர்த்னே நமக்கு நல்லது செய்யப்போகிறார்" என்றதும் ஐயா சொல்லிவிட்டார் என்று குத்து குத்தென்று குத்த அவரும் அமைச்சராக அலங்கார பதவியில் அமர்ந்தும் விட்டார். 1981 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் மொத்த மலையகத் தமிழர்களையும் குறிவைத்து ஜெயவர்த்னே குண்டர் படை தாக்க அப்போது இரத்தினபுரியில் உள்ள காவந்தை என்ற பகுதியில் ஒரே அறையில் 12 பேர்களை வைத்து பூட்டி எறியூட்டப்பட்ட போது தொண்டைமான் வந்து பார்ப்பதற்கு அவருடைய "பனிச்சுமை" இடம் கொடுக்கவில்லை.

ஆனால் ஜெயவர்த்னே நன்றி மறக்காதவர்.  அப்போது நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்குரிமை என்பது சிங்களர்களுக்கு மட்டும் தான் என்று முகத்தில் அப்பிய கரியை துடைத்துக்கொண்டு தொண்டைமான் அமைதி காத்தார்.  அப்போது ஜெயவர்த்னே சிஷ்யர் காமினி திசநாயகா சொன்ன வாசகம் " நாயில் ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டுருப்பவர் தொண்டைமான்.  அவர் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய அவஸ்யம் இல்லை",

ஆனால் மலையகத்தமிழர்களின் வாழ்வுரிமையை முற்றாக பறித்த ஜெயவர்த்னே குறித்து ஏதும் பேசாமல் மௌனம் காத்த தொண்டைமானை மீறி அப்போது போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்கள் தோல்வி அடையும் அளவிற்கு மொத்த மலையகத் தமிழர்களும் தங்களுடைய விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்தினர்.  அப்போது இருந்த 14 மலையக சங்கங்களும் தங்களை காத்துக்கொள்வதில் மட்டும் உறுதியாய் இருந்தனர்.  இதைவிட சிறப்பாக உலக வங்கியிடம் கடன் வாங்கி நட்சா திட்டம் மூலம் மலையக மக்கள் வாழ்ந்த இடங்களையும் தாரை வார்ப்பதும் கண ஜோராக நடந்து கொண்டுருந்தது.

மொத்தமாக அப்போது போராடிக்கொண்டுருந்த ஊதிய உயர்வு மலையகத் தமிழர்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார் ஜெயவர்த்னே. மறுபக்கம் சிங்கள குடியேற்றம்.  தொண்டைமான் தலைவராக ஜெயவர்த்னே தீர்க்கதரிசியாய் ஒவ்வொன்றையும் அவரை வைத்துக்கொண்டே பேச முடியாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுருந்தார்.

மற்றொரு புறம் அமிர்தலிங்கம்.  நடந்து கொண்டுருந்த இனவெறி தாக்குதல்களை நிறுத்தும் பொருட்டு ஊர்க்காவல் படை அமைக்க வேண்டும் என்று ஜெயவர்த்னேவிடம் விண்ணப்பம் கொடுத்தார். அவரும் சிறப்பாக செய்தார்.  சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டும். இத்துடன் ஜெயவர்த்னே செய்த மற்றொரு சிறப்பு, நடக்கும் கலவரங்களில் கொல்லப்படுபவர்கள் நீதி விசாரணை கோர முடியாது.  உறவினர்கள் பிணங்களை பார்க்கக்கூட முடியாது.  தொடங்கியது முதல் மூடும் வரைக்கும் ஊர்காவல் படையினர் தங்கள் கடமையில் கண்ணும் கருத்தாய் இருப்பார்கள் என்றார். பிரபாகரன் எப்படி தன்னுடைய கொள்கை சரி என்று நகர்ந்து வந்தாரோ அதே போல் தொடக்கம் முதல் ஜெயவர்த்னேவும்.

சிங்கள தமிழர்கள் மனக்கசப்பு உருவாகாத (1944) காலத்தில் சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்று தீர்மானத்தை கொண்டு வந்தவர்.

ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) ஆண்டு விழாக் கூட்டத்தில் (1955) சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற தீர்மானத்தை முதன்மையாக முன்மொழிந்தவர்.

பண்டாரா நாயகா (1957) தமிழர்களுக்கு ஓரளவிற்கேனும் உரிமைகள் கொடுக்கலாம் என்று முன்வந்த போது (பண்டா செல்வா ஒப்பந்தம்) இது சிங்களர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் உதை என்று குண்டர்கள் புடை சூழ கண்டி நோக்கி பாத யாத்திரை நடத்தியவர்.

ஆட்சிக்கு வந்ததும் (1977) " சண்டை என்றால் சண்டை. சமாதானம் என்றால் சமாதானம்" புதிய அறைகூவல் விடுத்து சிங்களர்களுக்கு சிக்னல் காட்டியவர்.

பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது நடந்த சிங்கள தமிழ் இன துவேச வாக்குவாதத்தை (1981) பல முறை வானொலியில் ஒலி பரப்பி சிங்களர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து திடீர் என்று கலவரத்தை ஏற்படுத்தியவர்.

"குமார் பொன்னம்பலம் தவிர அத்தனை பேர்களும் தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட்டனர்"  என்று திடீர் என்று ஒரு புதிய தத்துவம் சொன்னவர்.  கேட்ட சிங்களர்கள் குமார் பொன்னம்பலம் வீட்டை தாக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியவர்.

" 1975 ஆம் ஆண்டு முதல் 37 காவல் துறையினர்,9 அரசியல்வாதிகள், 13 இராணுவத்தினர்களை தமிழ் பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர்.  ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் நீங்கள் கொன்ற தமிழ் தீவிரவாதிகள் எண்ணிக்கை மிக சொற்பம் "

என்று 10. 6, 1983 அன்று வெளிநாட்டு பயணத்துக்கு முன் ஆயுதப்படையினர் முன்னால் உரையாற்றிய வாசகம் மேலே சொன்னது.  அது மட்டுமல்லாமல் " இனி தமிழ் தீவிரவாதிகளை அழிக்க தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவ ஆட்சியை செயல்படுத்தி அவர்களை முழுமையாக அழிக்கும் வரைக்கும் எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை" என்று அப்போது உருவான கலவரத்திற்கு அடிகோலியவர். இவ்வாறு சொன்னது லண்டன் டெலிகிராப் பத்திரிக்கைக்கு (1983) கொடுத்த பேட்டி.  பயந்த நிருபர் பின்வாங்கியதாக செய்தி.

"கடமையை மட்டும் செய்ய வேண்டும்.  பேச்சு கூடாது.  பலன் வரும்" என்பது பிரபாகரன் வாதம்.

"பேச, ஏன் நீ வாழவும் கூடாது.  மீறப்படும் போது மிதிக்கப்படுவது மட்டுமன்றி நசுக்கப்படுவீர்கள் " என்பது ஜெயவர்த்னே பிரதிவாதம்.  ஆனால் மொத்தமாய் "முடக்குவாதமாய் போனது தமிழர்களின் வாழ்க்கை. அன்று வாதத்தால் பாதிக்கப்பட்ட உடம்பு உறுப்புகளை இறுதி முள்ளிவாய்க்காலில் இராசாயன குண்டுகளில் வந்து நிறுத்தியுள்ளது.
 இப்போது பிரபாகரன் வயது 27ஆனால் ஜெயவர்த்னேவின் அரசியல் அனுபவம் மட்டும் இந்த எண்ணிக்கையை விட அதிகம்.  ஆண்ட சிங்கள தலைவர்களில் இவர் எப்படி வித்யாசமாக இருந்தாரோ அதே போல் தராசு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி நின்று முள் நேராக நின்றது விதி அல்லது ஆச்சரியம்.  ஜெயவர்த்னேவுடன் நேருக்கு நேர் போட்டியில் மல்லுக்கு நின்ற பிரபாகரன் ஆளுமை குறிப்பிடத்தக்கது.

"வாங்கப்பா உட்கார்ந்து பேசலாம்" என்று ஆட்சியாளர்களும் அன்று அழைக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. உட்கார்ந்து பேச தயராய் இருந்த அஹிம்சைவாதிகளையும் மதிப்பாரும் இல்லை.  தீர்வும் கிடைத்தபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உருவாக்குகிறோம் என்றவர்களும் இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார்கள்?

Thursday, December 17, 2009

வலியின் பாதை

"மக்களுக்கான போராட்டம் என்றால் நமக்கு வெகு ஜன ஆதரவு அவஸ்யம் தேவை. மக்களுடன் நாம் ஒன்றாக கலக்காவிட்டால் எதிர்காலத்தில் நாம் தனிமைபடுத்தப்பட்டவர்களாக ஆக்கப்படுவோம்"  இது தொடக்கம் முதலே உமா மகேஸ்வரனின் சிந்தாந்தம்.

" மக்களுக்குத் தேவை செயல் மட்டுமே.  வெறும் வாய்ப்பேச்சு அல்ல"  இது பிரபாகரனின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் கடைபிடித்த கொள்கை.

முடிவான செயல் என்று எதை நாம் உருவாக்குகிறோமே அதன் விளைவுகளையும் விபரீதங்களையும் நாம் தான் சமாளிக்க வேண்டும்.  வெறும் அரசியல் பேச்சுகள் பேசியது போதும் என்பது போல பிரபாகரனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கோர்த்து மாலையாக மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தது.

"இது வரையிலும் செய்த மொத்த கொலைகளையும் நாங்கள் தான் செய்தோம்"  என்று உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டு வீரகேசரியில் வெளியான போது தான் பிரபாகரன் குறித்த அச்சமும் அவரின் கொள்கைகள் குறித்த தாக்கமும் அனைவருக்கும் புரியத் தொடங்கியது.

அன்று முதல் இன்று வரையிலும் உலகமெங்கும் தீர்வு காணப்படாத மொத்த பிரச்சனைகளும் அரசாங்கத்தின் பார்வையில் பட வேண்டும், அவர்களின் கவனம் திசை திருப்பப்படவேண்டும் என்றால் கையாளும் வன்முறைகள் தான் இறுதித் தீர்வாக இருக்கிறது.  தெலுங்கானா வரைக்கும்.

பிரபாகரன் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது தீர்க்கப்படவேண்டியது என்பதை ஆட்சியாளர்களின் கவனம் பெற வைக்க வேண்டும் என்று தொடக்கத்தில் தொடங்கியது தான், பயணித்த வந்த பேரூந்தை ஆட்கள் அணைவரையும் இறக்கி விட்டு கொளுத்தியது.  அதுவே வளர்ச்சி பெற்று அரசியல் அமைப்புச் சட்டம் தீர்மானமாய் (1978) கொண்டு வரப்பட்ட போது AVRO 748 ரத்மலானாவிலிருந்து பாலை செய்யும் விமானத்தை ஆட்கள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு (செப்டம்பர் 7) குண்டு வைத்து தகர்க்கும் அளவிற்கு முன்னேறியது.

அந்த வெற்றிக்குப் பிறகு இணைந்தவர்கள் தான் ரகு, சதாசிவம் பிள்ளை என்ற கிட்டு, மாத்தையா. ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபாகரன் இயக்கத்தில் சேர்ந்து கொண்டுருந்த இளைஞர்கள் பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள்.  கல்லூரியில் தமிழன் என்பதால் இடம் மறுக்கப்பட்டவர்கள், காவல்துறை பணிக்கு இதே காரணத்தால் மறுக்கப்பட்டவர்கள், கண் எதிரே கற்பழிக்கப்பட்ட தங்கை, அம்மா என்று பார்த்து புத்தி பேதலித்தவர்கள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.

காரணம் அப்போதைய சூழ்நிலையில் அஹிம்சை வழியில் நம்பிக்கை இழக்காமல் போராடிக்கொண்டுருந்த மிதவாத தலைவர்களிடம் இந்த ஆயுதப்பாதை சலசலப்பை உருவாக்கியிருந்தது. அதே காலகட்டத்தில் கியூபாவில் நடந்த (1979) உலக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாடு நடக்க அங்கு உரையாற்ற வேண்டிய அறிவார்ந்த கருத்துக்களை எழுதும் பொருட்டு அறிமுகமானவர் தான் ஆன்டன் பாலசிங்கம்.

வீரகேசரியில் பணிபுரிந்த பத்திரிக்கை ஆசிரியர்.செய்தியாளர், உயர்கல்வி கற்ற யாழ்பாண தமிழர், பிரிட்டீஷ் தூதரகப்பணியில் இருந்தவர்.  தொடக்கத்தில் திருமணம் செய்திருந்த பெண் இறந்த காரணத்தால் தன்னிடம் இருந்த நீரிழிவு நோயையையும் பொருட்படுத்தாமல் அடேல் என்ற ஆஸ்திரிய நர்ஸ்யை திருமணம் செய்து கொண்டு (1978) பின்னாளில் லண்டனில் வாழ்ந்து கொண்டுருந்தவர்.

1979 ஆம் ஜெயவர்த்தனே உருவாக்கிய "மொத்த உள்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளின் அமைப்புகளையும் தடை செய்கின்றேன்" என்று சொல்லி இருந்தால் அது ஒரு சட்டக்கடமை ஆகியிருக்கும்.  ஆனால் அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட போதே "உங்கள் வானாளவிய அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று பச்சை விளக்கை காட்டியதும் தொடர்ந்து உருவான கலவரங்களும், கண்ணீர்களும் மொத்தமாக ஆயுதப்பாதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.

படித்தவர், படிக்காதவர், நடந்துகொண்டுருந்தவர்கள், பள்ளிக்குச் சென்று கொண்டுருந்தவர்கள் என்று தொடங்கி தமிழன் என்றாலே நீ தீவிரவாதி என்று கோரத் தாண்டவம் தொடங்கியது.  விதவிதமான சித்ரவதைகள், அச்சமூட்டும் அவஸ்த்தைகள். இலங்கையில் ஆண்ட மொத்த ஆட்சியாளர்களை விட இப்போது ஆட்சி புரிந்து கொண்டுருக்கும் ஜெயவர்த்தனே என்ற ஒரு தனி மனிதரால் பிரபாகரன் எந்த அளவிற்கு மூர்க்கத்தனமாக வளர்ந்தாரோ அந்த அளவிற்கு மொத்த தமிழர்களின் முகவரியும் முடங்கப்பெற்று, தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் சுடுகாடாய் மாற்றம் பெறத் தொடங்கியது.

"நயவஞ்சகன்" என்ற பட்டம் ஜெயவர்த்தனேக்கு தமிழர்கள் மட்டும் கொடுக்கவில்லை.  ஆண்ட சீறீமாவோ, சார்ந்து இருந்த அமிர்தலிங்கம் என்ற அத்தனை பேர்களும் எள்ளும் கொள்ளும் வெடித்து கொடுத்த பட்டங்கள்.  அந்த அளவிற்கு ஒரு தீர்க்கதரிசியாய், ஞானி போல் ஒவ்வொரு காரியத்தையும் சுருதி சுத்தமாய் செய்து கொண்டுருந்தார்.

அதுதான் பிரபாகரன் வார்த்தைகளில் "  அவர் மட்டும் உண்மையான பௌத்தராக வாழ்ந்து இருந்தால் நான் ஆயுதம் தூக்க வேண்டிய அவஸ்யம் இருந்து இருக்காது" என்பது போல் மாறியது.  சேனநாயகா ஆட்சி முதல் அரசாங்கத்தில் இருப்பவர்.  ஒவ்வொரு கால காட்டத்திலும் அவருடைய பதவிகள் மாறியிருக்கும்.  எதிர்கட்சி என்ற போதிலும் அவருடைய மொத்த எண்ணங்களும் "தமிழர் எதிர்ப்பு" என்ற விதத்தில் ஒரு இம்மி அளவு கூட மாற்றம் பெறவில்லை.
முழுப்பெயர்  (Junius Richard Jayewardene ) ஜுனியஸ் ஜெயவர்த்னே.  சுப்ரிம் கோர்ட் நீதிபதியின் மகன்.  கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியவர்.  டட்லி சேனநாயகா (சிங்களர்களின் தந்தை) ஆட்சிகாலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். முப்பது வருடங்கள் காத்து இருந்து ஆட்சியை பிடித்தவர்.  ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் குறித்து எந்தப் புகார் பட்டியல் வந்தாலும் உடனே "அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தான் தொடங்கி வைப்பார்.  உருவாகும் கலவரம் முற்றுப்பெறும் போது தமிழர்களின் சொத்தும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டு இருக்கும்.  ஒரே பாதை. கொள்கை.  ஒரே தீர்மானம்.

இவர் இந்த அளவிற்கு தமிழர்கள் மேல் வெறுப்பு கொண்டுருந்தமைக்கு ஒரு பழைய பமையும் காரணமாய் இருந்தது.  1977 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது (துரையப்பா மைதானம்) தான் பேசிக்கொண்டுருந்த மேடை மொத்தமாக சரிய வைக்கப்பட்டு அவமானம் பெற்ற சம்பவம் அவர் ஆழ்மனதில் பதிந்து போயிருந்தது.  காரணம் அப்போது அந்த நிகழ்வை நிகழ்த்தியவர்கள் EROS  குழுவினர்.

ஆண்டு விட்டுச் சென்ற அத்தனை ஆட்சியாளர்களும் இது சிங்கள நாடு என்ற முன்னேற்பாடுகளைச் செய்தார்களே தவிர இவர் ஆட்சிகாலத்தில் அதை நடைமுறையாக மாற்றம் செய்தவர். சீறிமாவோ பண்டார நாயகா தோற்கடிப்பட்டு நடந்த எட்டாவது பொதுத்தேர்தலில் வென்று ஆட்சியைப்பிடித்த ஜெயவர்த்னேவுக்கு ஆதரவு கரம் நீட்டி எதிர்க்கட்சி பதவியை வாங்கிக்கொண்டு அலங்கரித்தவர் அமிர்தலிங்கம். தந்தை செல்வா இறந்த பிறகு அவரால் முன் மொழியப்பட்ட புகழ்பெற்ற தனி நாடு தான் இனி தீர்வு என்ற "வட்டுக்கோட்டை தீர்மானத்தை" கையில் எடுத்துக்கொண்டு ஜெயித்த வந்த அமிர்தலிங்கம் அப்போது கேட்ட இளைஞர்களிடம் " சற்று காலம் பொறுமையாக இருப்போம்" என்றார்.

யாழ்பாணத்தில் இருந்த ரோட்டரி கிளப் புற்றுநோய் சிகிச்சைக்காக நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சியை புனித பாட்ரிக் கல்லூரியில் நடத்திக்கொண்டுருக்கும் போது அனுமதி சீட்டு வாங்காமல் உள்ளே புகுந்த காவல்துறையினரை இளைஞர்கள் கண்டிக்க அப்போது தொடங்கிய வன்முறையில் மொத்த யாழ்பாணமே சுடுகாடு போல் மாற்றம் பெற்றது.  யாழ்பாண மார்க்கெட் தீக்கிறையானது.
அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தான் தாக்கப்பட்டதிற்கு ஜெயவர்த்னேவிடம் கோபம் கொப்புளிக்க கேள்வியாய் கேட்க அப்போது அவர் சொன்ன வாசகம்.

" திருகோணமலையை தலைமையாய்க் கொண்டு தனிநாடு என்ற கோரிக்கையை பார்த்துக்கொண்டு சிங்கள மக்கள் எவ்வாறு பொறுமை காப்பார்கள்?  சண்டை என்றால் சண்டை. சமாதானம் என்றால் சமாதானம்" என்றார்.  எதிர்கட்சி தலைவர் பதவி அழும் கட்சி பதவியாய் மாற்றம் பெற்றது.

அப்போது நடந்து பாராளுமன்ற வாக்குவாதம் மேலும் கலவரங்கள் பரவ காரணமாய் இருந்து கொழும்பில் வாழ்ந்த அத்தனை தமிழர்களின் சொத்தும் சூறையாடப்பட்டது.  மலையகத்தமிழர்கள் 60.000 பேர்கள் காடுகளுக்குள் புகுந்து நிர்கதியாய் மாறிப்போனார்கள். 100 கோடி மதிப்புள்ள தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் ஆனது.

இந்தக் கலவரத்தின் மற்றொரு கிளைநதி, யாழ்பாணத்தில் இருந்த பல்கலைகழகத்தை மொத்தமாக வெறுத்துக்கொண்டுருந்த சிங்கள மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப் பெற்ற கலவரத்தீ மொத்த தமிழர்களும் வாழ்ந்த அத்தனை பகுதிகளுக்கும் பரவி கோரத்தாண்டவம் ஆடியது.

மொத்தமாக அஹிம்சைவாதியான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் வலு இழந்து போனதும், ஹிம்சையான பிரபாகரன் ஆயுதப்பாதை வலுவடைந்துக் கொண்டு மாற்றம் பெற்றதும் வலியான தமிழர்களின் வாழ்வுரிமை கோரச் சுவடுகள் தொடக்கம் பெற்றதும் 1977ல் தொடங்கி தொடர்ந்து கொண்டு இருந்த கலவரங்கள்.

Tuesday, December 15, 2009

பாயும் புலி

"நான் இனி உங்களுக்கு பயன் உள்ளவனாக இருக்கமாட்டேன். என்னை மறந்து விடுங்கள்"  தலைமறைவு கானக வாழ்க்கையின் தன்னை தேடி காட்டுக்குள் வந்த அப்பாவிடம் பிரபாகரன் சொன்ன வாசகம் இது.

தன்னுடைய பள்ளிப் பருவத்திலே(14 வயது) ஒத்த சிந்தனைகள் உடையவர்களை ஒன்று இணைக்க முடிந்த பிரபாகரனுக்கு வெடிப் பொருட்கள் மேல் ஆசையும், அப்போதைய சூழ்நிலையில் கந்தகத் துகள்களை ஒன்று சேர்த்து வெடிக்க வைத்த ஆர்வமும் உள்ளே கனன்று கொண்டு இருந்து இருக்கிறது. காரணம் எப்போது வீட்டை விட்டு நிரந்தரமாக கிளம்ப வேண்டும் என்று தோன்றியதோ அப்போதே தான் இருக்கும் அத்தனை குடும்ப புகைப்படங்களையும் கிழித்து அழித்து இருந்தார்.  எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் தன்னைப் பற்றிய தடயங்கள் இருந்து விடக் கூடாது என்ற பழக்கம் இளம் வயதிலேயே இருந்துள்ளது.

குடும்பச் சூழ்நிலைக்கும் தனக்குள் உருவான ரசாயன மாற்றங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டுருந்த போது அறிமுகமானவர்கள் தான் குட்டிமணி தங்கதுரை. பின்னாளில் சிறையில் உன்னுடைய கண்கள் இருந்தால் தானே மலரப்போகும் தமிழீழத்தை பார்க்க முடியும் என்று நோண்டி எடுத்து தரையில் போட்டு சிதைத்த கொடுமையும் நடந்தது.  இவர்கள் 25 பேர் கொண்ட குழுவுடன் தனியாக சிவகுமரன் போல் வேறு ஒரு பாதையில் செயல்பட்டுக் கொண்டுருந்தனர்.  அப்போது பிரபாகரன் இவர்களை அண்ணாந்து பார்க்கும் பருவம்.  அண்ணா என்று அழைத்தவரை அவர்கள் அப்போது அழைத்த தம்பி என்ற பதமே மொத்த இலங்கை வாழ் மக்களின் கடைசி வரையிலும் பிரபாகரனின் செல்லப்பெயர் ஆனது.

சிவகுமரன் தொடங்கி வைத்த ஆயுத பாதையான  சிங்கள இனவாதியான கலாச்சார துறை அமைச்சர்  சோமவீர சந்திரசிறீ (1970) உரும்பிராய் இந்து கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த போது அவரது காருக்கு வைத்த குண்டு வெடித்து மயிரிழையில் பலத்த சேதத்துடன் அமைச்சர் தப்பிக்க மொத்தமாக போராடிக் கொண்டுருந்தவர்களுக்கும் அந்த நிகழ்ச்சி தான் முதல் பால பாடம்.

சீறிமாவோ ஆட்சி காலத்தில் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்தி பெரமுணா என்ற சிங்கள கிளர்ச்சியாளர்களின் ஆயுதப்போராட்டங்களும், அவர்கள் சேர்த்து வைத்து இருந்த வெடிப்பொருங்கள் வெடித்து சிதற உண்டான கலவரம் என்பதும், ஆயுதம் தான் இனி முடிவு பாதை என்று யோசித்துக்கொண்டுருந்தவர்களை மொத்தமாக தைரியமுட்டிய நிகழ்ச்சி அது.

ஆயுதம் இருந்தால் அரசாங்கத்தை பயமுறுத்தலாம், திரும்பி பார்க்க வைக்கலாம்.

ஓய்வு நேரத்தில் குட்டிமணி குழுவில் பிரபாகரன் சேர்ந்த போதும் பின்னாளில் அவர்களுடன் இணைந்த போதும் மொத்தமாக குரு இல்லாமல் தனக்குத் தானே கற்றுக்கொண்டதும்,  துப்பாக்கி இயக்கத்தின் மொத்த ஆளுமையும் அவரிடம் வந்து இருந்தது.  அதுவே வீட்டில் சேர்த்து வைத்து இருந்த பணம் மூலம் தனியாக ஒரு துப்பாக்கி வாங்கும் அளவிற்கு.

1974 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழம் என்பது தான் இனி தீர்வு என்று போட்டியிட்டு வென்ற தந்தை செல்வா மூலம் கிடைத்த தேர்தல் வெற்றி என்பதும் அப்போது எண்ணங்களில் மட்டும் வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை இளைஞர்களையும் மேலும் மேலும் உரமூட்டியது.
உருவாக்கும் எண்ணங்கள் தான் வாழ்க்கை.  ஆனால் குடும்ப சூழ்நிலைக்கும் பிரபாகரன் எண்ணங்களுக்கும் துளிகூட சம்மந்தம் இல்லை.  தீர்வு என்பது இந்த தீவுக்குள் கிடைக்க வேண்டுமென்றால் தனி நாடு தான்.

எந்த சந்தேகமும் இல்லை.  தொடக்கம் முதலே ஊறிப்போன அந்த எண்ணமே அவரை நகர்த்தியது.  நடந்து கொண்டுருந்த ஒவ்வொரு ஆயுதப் போராட்டங்களினால் உருவான கிளர்ச்சி அவரை வழி நடத்தியது.  யாழ்பாணத்தில் வந்து சேர்ந்த பேரூந்தை பயணித்தவர்களை மொத்தமாக இறக்கி விட்டு எறித்த போது அது ஒரு முடிவுக்கும் வந்து இருந்தது.  அதுவே ஆல்பர்ட் துரையப்பாவை ஒரே ஒரு தோட்டாவில் சுட்டுக்கொன்ற போது வலிமை உள்ளதாக மாற்றி இருந்தது.

கானக வாழ்க்கை மொத்த அச்சத்தையும் போக்கி இருந்தது.  எப்போதும் சந்தேகம். எவர் மீதும் பாரபட்சம் இல்லாத பார்வை, கொண்ட கொள்கையில் உறுதி, இடையில் வளர்த்துக்கொண்ட குணங்கள் ஒவ்வொன்றும் மிகப் பலமான அஸ்திவாரம் போல் உள்ளே இறுகி விட்டது. தொடக்கத்தில் ஒவ்வொருவருடனும் இணைந்த போதும், உண்டான பிரிவினைகள், எழுந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் தனிமனித வக்ரமும், ஆசையும் இருந்த போதெல்லாம் தன்னுடைய ஒழுக்க பாதையை எவரும் நெருக்க, நெருங்க முடியாத அளவிற்கு தன்னை நிர்மாணம் செய்து இருந்தார்.

தான் சொல்வது சட்டம் என்பது போல் நடந்த போது உருவான பாகப்பிரிவினைகள் போதும் பயம் ஏதும் இல்லாமல் ஒதுங்க முடிந்தவரால் அதே போல் மிக விரையில் புதிய கட்டுமானமும் உருவாக்க முடிந்தது.  ஒதுங்கிப்போனவர்களும், ஒதுக்கியவர்களும் மறைந்தே போனார்கள்.  அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபாகரன் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் செய்த ஒவ்வொன்றுக்கும் பொறுமையின் உச்சத்தில் தோட்டா மூலம் பதில் உரைத்தார்.

நண்பன்,  பகைவன் என்றோ பாகுபாடும் இல்லை.  ஆனால் இவனால் ஆபத்து என்றால் உடனடி தீர்வு.  தொடக்கத்தில் பார்த்த செட்டி காவல்துறை உளவாளியாக மாறிய போது கதை முடிக்கப்பட்டது.  அதே போல் உளவாளியாக செயல்பட்டுக்கொண்டுருந்த (நடராஜன்) பெட்ரோல் பங்க் உரிமையாளர் கதையும் முடிக்கப்பட்டது.  ஆல்பர்ட் துரையாப்பா கொலை விசாரனையில் ஈடுபட்டுக்கொண்டுருந்தவர்கள், தமிழ் இளைஞர்களை கிள்ளுக்கிரையாக நினைத்துக்கொண்டுருந்த காவல்துறை அதிகாரி பஸ்தியம் பிள்ளை என்று வரிசையாக கொன்று கொண்டே வந்த எண்ணிக்கை மிக நீளம்.

பிடிபட்டவர்களை சிங்கள ஆட்சியாளர்கள் படுத்தும் பாடும், அதனால் தொடக்கம் முதலே ஒவ்வொருவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவஸ்யம் என்பதையும் தன்னுடைய மொழியில் பிரபாகரன் சொன்ன போது எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை.  தான் எவரையும் நம்புவது இல்லை என்பதை உறுதிபடுத்தும் பொருட்டு அப்போது நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

"தான் கொண்ட கொள்கை ஏதும் தவறானது இல்லை" என்பது போல் ஒவ்வொன்றும் உணர்த்திக்கொண்டே இருந்து அதுவே கடைசி வரைக்கும் பாடம் போல் ஆகிவிட்டது.  போராடுகிறோம் என்று வந்தவர்கள் போராட்டத்தை தவிர மற்ற அத்தனையும் செய்து கொண்டுருந்தது ஒரு பக்கம். நீ போராடினால் என்னுடைய பதிலடி இப்படித்தான் இருக்கும் என்று சிங்கள ஆட்சியளார்கள் கொடுத்த மரண அடி மறுபக்கம்.  ஒவ்வொரு அடியும் இடிபோல் இறங்கிக்கொண்டேயிருக்க சினம் கொண்ட புலியின் சீற்றமும் சீறிப்பாய்ந்து கொண்டே இருந்தது.

வலிமை உடையவர்கள் நடத்திய போராட்டங்களும் வலிமைய பெற்றவர்கள் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும் இடையே படிப்படியாக மொத்த தமிழர்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்பட்டது.

கலவரங்கள் தொடர்வது என்பது சிங்களர்களைப் பொறுத்தவரையில் அனுமதிக்கப்பட்ட சட்டபூர்வமான கொலை, கொள்ளை, கற்பழிப்பு.  ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் பதவிக்கான பசை.

தூண்டுதல் நடக்கும்.  தூண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் எந்த செயல்பாடுகளுக்கும் ஒரு வரைமுறையோ இருக்காது.  பாலியல் துன்புறுத்துதல் என்பது பால் அருந்துவது போல அவர்களுக்கு காலப்போக்கில் மாற்றம் பெற்றதாக ஆகிவிட்டது.   அவர்களுக்கு ஒரே நோக்கம் கொலை, கொள்ளை.  ஆனால் உள்ளே தமிழீழத்திற்கு போராடுகிறோம் என்று இருப்பவர்களின் ஒரே நோக்கம் தலைமைப்பதவி.  தான் என்கிற நோக்கம்.

உள்ளே ஒன்றாக இருப்பவர்களும் போட்டி பூசலில் மாட்டிக்கொள்வது வரைக்கும் ஊன்றி கவனித்த காரணத்தால் மற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதும் தன்னுடைய இருப்பை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்க செய்ய முடிந்தது.  நிலையில்லாத இருப்பிடம், தன்னுடைய மனதுக்குக்கூட தெரியாத ரகஸ்யமாய் தன்னை வைத்துக்கொண்ட பழக்கவழக்கங்களும் ஆட்சியாளர்கள் கையில் கடைசி வரையிலும் சிக்க வைக்க முடியவில்லை.

அதேபோல் பிரபாகரன் , இயக்க வளர்ச்சிக்காக புத்தூர்(1975) வங்கியை மிக எளிதாக கொள்ளையடித்து சென்றதைப்பார்த்து , ஈரோஸ் என்ற இயக்கம் லண்டனில் போட்டியாக தொடங்கியதைப்போல அங்கிருந்து பிரிந்தவர்களான முத்துக்குமாரசாமி, வரதராஜப்பெருமாள் உருவாக்கிய இயக்கமான ELO (Eealam Liberation Organisations)  புலாவி கூட்டுறவு வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்டனர்.  பிரியும் இயக்கங்கள் பெயர் கூட இல்லாமல் நாளடைவில் மறையத் தொடங்கியது.

தந்தை செல்வாவிற்கு பிறகு அமிர்தலிங்கம் பொறுப்புக்கு வந்த போது ஆயுத இளைஞர்களின் வன்முறை என்பது அவரே நினைத்துப் பார்க்க முடியாத இடத்துக்கு வந்து சேர்ந்து இருந்தது. அடக்க முடியாது என்ற நிலைமையில் ஒரு கட்டத்தில் அவரே சற்று அமைதியாய் செயல்படலாமே என்கின்ற அளவிற்கு?

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு பதிலடி என்று சிங்கள ஆட்சியாளர்கள் கொடுத்த மரண அடி என்பது அப்பாவிகளை மட்டுமல்ல அறிவார்ந்த தமிழ் பெரியவர்களையும் சிறையில் தள்ளும் கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சிங்கள சிறை என்பது செய்த தவறுக்கு கொடுக்க வேண்டிய தண்டனைக்கான இடம் என்பதைவிட மொத்த சிங்கள அதிகாரிகளின் வக்ர எண்ண வடிகால் போலத்தான் இருக்கிறது.  அம்மணமாக நிற்க வைத்தல் என்று தொடங்கிய வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு புத்தி பேதலித்தவர்களால் ஒரு அளவிற்கு மேல் செயல்படாத நிலைமை என்கிற அளவிற்கு மிகக் கொடூரமாக இருந்தது. சிங்கள மந்தப்புத்தியும், குறுக்குவழி கல்வியும், மறக்கப்பட்ட புத்த போதனைகளும் போதை மனம் கொண்டவர்களால் ஆயுதப் பாதை என்பது நீண்டு கொண்டே இருக்க உதவியது.  இன்றுவரையிலும்?

பிரபாகரனிடம் இருந்து பிரிந்தவர்கள், சர்வாதிகாரி என்று திட்டித்தீர்த்தவர்கள், அவரின் எதிர்மறை குணாதிசியங்களை பக்கம் பக்கம் எழுதியவர்கள் என்று அத்தனை பேர்களும் ஒரு சேர சொல்வது பிரபாகரன் என்றொரு தனி மனிதன் இல்லை என்றால் போராட்டம் தொடக்கம் ஆன நிலையில் இருந்த போது இருந்த இலங்கை பாதுகாப்பு பட்ஜெட் அடுத்த 30 ஆண்டுகளில் (1970/2000) மக்கள் நல்வாழ்க்கைக்கு கூட ஒதுக்கமுடியாமல் மொத்த வரவுகளையும் ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டிய அளவிற்கு அச்சப்படுத்தும் அளவிற்கு வளர்ந்தமையைத் தான் ஒவ்வொருவரும் குறிப்பிடுகிறார்கள். இது பிரபாகரன் என்றறொரு தனி மனித உழைப்பு என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.

அழுந்த அழுத்த வெடித்து சிதறும் ரசாயன குண்டுகள் போல உண்மையான தீர்வைத் தவிர சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனையும் செய்தார்கள்.  காரணம் சீறிமாவோ ஆட்சி மாறி ஜெயவர்த்தனே வந்த போது பிரபாகரன் வலிமையும் கூடியிருந்தது. அப்போது தொடர்ச்சியாக நடந்த கலவரத்தின் விளைவாக உலகப்புகழ் பெற்ற யாழ்பாண (ஒரு லட்சம் தமிழ் புத்தகங்கள்) நூலகம் எறிக்கப்பட்ட போது மொத்த தமிழ் மக்களையும் ஆயுதப்பாதை தேர்ந்தெடுத்தவர்களை சரிதான் என்று சொல்லும் அளவிற்கு ஒன்றிணைத்தது.